states

45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இபிஎப் வட்டி விகிதம் குறைப்பு

புதுதில்லி, ஜூன் 4 - 2021-22 ஆம் நிதியாண்டிற்கு உரிய-  இ.பி.எப். (Employees’ Provident Fund) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி  விகிதத்தை, 8.50 சதவிகிதத்திலிருந்து 8.10 சதவிகித மாக குறைத்து, நாடு முழுவதுமுள்ள 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களை மோடி அரசு வஞ்சித்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம்  (Employees’ Provident Fund Organisa- tion - EPFO) நாட்டின் மிகப் பெரிய ஓய்வூதிய நிதியம் மற்றும் சுமார் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புடைய இரண்டாவது பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இதில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.  இருபது தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களில் மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎப்  பிடித்தம் செய்யப்பட வேண்டியது, “தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர  ஏற்பாடுகள் சட்டம், 1952- இன் கீழ்” கட்டாய மாகும். இதன்படி அடிப்படை ஊதியம் மற்றும்  அகவிலைப்படியில் 12 சதவிகிதம் ஊழியர்களின் பங்களிப்பாகவும் 12 சதவிகிதம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்களிப்பாகவும் பிடித்தம் செய்யப்படும். அந்த நிதி, இபிஎப் வாரியத்தில் செலுத்தப்படும். ஒட்டுமொத்த 24 சதவிகித பங்களிப்பில், ஒரு பகுதி ஓய்வூதியத் திட்டத்திற்கு  பயன்படுத்தப்படும்.

இந்த சேமிப்பை சம்பந்தப்பட்ட தொழி லாளர்கள், ஓய்வுபெற்ற பின்னரோ அல்லது தங்களின் தேவையைப் பொறுத்தோ வட்டியுடன் பெற்றுக் கொள்வார்கள். அந்த அடிப்படையில் நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள், தங்க ளின் வருங்காலத்திற்காக, ஒன்றிய அரசின் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சேமித்துள்ளனர்.  இந்த சேமிப்புகள், அதிகபட்சமாக 65 சதவிகிதம் அளவிற்கு அரசு கடன் பத்திரங்களிலும், 15 சதவிகிதம் அதிக சந்தை பாதிப்புக்குள்ளாகாத பரஸ்பர நிதித் திட்டங்களிலும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், 2015-16 நிதியாண்டு முதல் பகுதியளவு  பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாய், தொழி லாளர்களின் சேமிப்புக்கான வட்டியாக வழங்கப்படுகிறது. வட்டி விகிதத்தை, சி.பி.டி. எனப்படும் மத்திய வைப்புநிதி வாரிய அறக்கட்டளை நிர்வாகம்,  (Central Board of Trustees) ஒவ்வொரு ஆண்டும் தீர்மானிக்கும். இந்த வகையில், இபிஎப்ஓ  திட்டத்தில் இணைந்த தொழிலாளர்களுக்கு, கடந்த  காலங்களில் ஏனைய சேமிப்புத் திட்டங்களைக் காட்டிலும் அதிகமான வட்டி வழங்கப்பட்டு வந்தது. 2001 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் 9.50 சதவிகிதம் என்ற அளவிற்கு வட்டி வழங்கப்பட்டது. 

இது 2005-2010 வரையிலான காலத்தில் மட்டும் 8.50 சதவிகிதமாக ஒரே நிலையில் நீடித்தது.  அதன்பிறகு 2010-11 நிதியாண்டில் 9.50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டாலும், 2011-12 நிதியாண்டில் மீண்டும் 8.25 சதவிகிதமாக சுமார் 1.25 சதவிகிதம் குறைக்கப்பட்டது.  2012-13 நிதியாண்டில் 8.50  சதவிகிதம், 2013-15 வரை  8.75 சதவிகி தம், 2015-16 நிதியாண்டில் 8.80 சதவிகிதம்,  2016-17 நிதியாண்டில் 8.65 சதவிகிதம், 2017-18  நிதியாண்டில் 8.55 சதவிகிதம், 2018-19 நிதி யாண்டில் 8.65 சதவிகிதம், 2019-20 மற்றும்  2020-21 நிதியாண்டுகளுக்கு 8.50 சதவிகிதம்  என்று தொடர்ந்து வட்டி குறைக்கப்பட்டது. இந்நிலையில்தான், ஒன்றிய பாஜக அர சானது, இந்த வட்டி விகிதத்தை 2021-22 நிதி யாண்டிற்கு மேலும் குறைத்துள்ளது. 8.50 சத விகிதத்தில் இருந்து, ஒரேயடியாக 8.10 சத விகிதம் ஆக்கியுள்ளது.

இதற்கு முன்பு, இபிஎப்ஓ மூலமான வட்டி  விகிதம் 1977-78 நிதியாண்டில்தான் 8 சதவிகி தம் என்ற குறைந்தபட்ச அளவில்நிர்ணயிக் கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, இப்போது தான் 8.10 சதவிகிதம் என்ற மிகக்குறைந்த வட்டி நிர்ணயத்தை மோடி அரசு செய்துள் ளது. முன்னதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்  தர் யாதவ் தலைமையில் பி.எப். அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம்,  கடந்த மார்ச் மாதம் 11, 12 தேதிகளில் கவு காத்தியில் நடைபெற்றது. அப்போது, இபிஎப் வாரிய மத்திய அறங்காவலர் குழு வில் உள்ள அரசுப் பிரதிநிதிகளும், முதலாளி களும் இபிஎப் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதேநேரம், சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத் தும் இபிஎப் வாரியத்தின் மத்திய அறங்காவ லர் குழுவில் உள்ள அனைத்து ஊழியர் பிரதி நிதிகளும் தொழிலாளர்களின் சேமிப்புக் கான வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்க  வேண்டும் என்று தங்கள் தரப்பு நியாயத்தை  எடுத்துவைத்து வாதாடினர்.

எனினும் இபிஎப்ஓ வாரியம், அரசு மற்றும் முதலாளிகளின் விருப்பத்தை நிறை வேற்றும் முடிவையே எடுத்தது.  2021-22 நிதி யாண்டிற்கு இபிஎப்ஓ வட்டி விகிதத்தை 8.50 சதவிகிதத்திலிருந்து 8.10 சதவிகிதம் குறைக்கும் பரிந்துரையை முன்வைத்தது. இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், “சர்வதேச நில வரம் மற்றும் சந்தை நிலவரத்தை மனதில்  கொண்டு வட்டி விகிதம்  இறுதி செய்யப்பட்  டுள்ளது. சர்வதேச சூழ்நிலையை மதிப் பாய்வு செய்த பிறகே 8.10 சதவிகித வட்டி விகிதத்தை பரிந்துரை செய்தோம். சமூக பாதுகாப்பு மற்றும் சந்தை ஸ்திரத்தன்மை இரண்டையும் கவனத்தில் கொண்டு இந்த  முடிவு எடுக்கப்பட்டது” என்று ஒன்றிய தொழி லாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்  பேட்டி அளித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், “8.10 சதவிகிதம் என்பது குறைவான வட்டி  என்று கூறமுடியாது; ஏனைய ஓய்வூதிய அமைப்புகள் வழங்கும் வட்டியை விட இது அதிகம்தான்” என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான், முதலாளிகளின் விருப்பத்தின் அடிப்படையிலான 8.10 சத விகிதம் வட்டிக் குறைப்பு பரிந்துரைக்கு நரேந்திர மோடி அரசின் நிதியமைச்சகம் அதி காரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, 8.10 சதவிகிதம் என்ற வட்டித்  தொகை தொழிலாளர்களின் இபிஎப்ஓ கணக்கு  களில் விரைவில் வரவு வைக்கப்பட உள்ளது.