விசா கட்டணத்தை உயர்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்தில் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை ஈடு கட்ட, வெளிநாட்டினரின் விசாவிற்கான வரியை உயர்த்தப் போவதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஜூலையில் அறிவித்தார். அதற்கான மசோதா நாடாளுமன்ற த்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்,கட்டண உயர்வு அறிவிப்பை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எச்-1 பி விசா திட்டம் “ஒப்பந்த அடிமைத்தனம்”
அமெரிக்காவின் எச்-1 பி விசா திட்டத்தை ஒப்பந்த அடிமை த்தனம் என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி விமர்சித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்தான் வெற்றி பெற்றால், லாட்டரி அடிப் படையில் விசா பெறும் முறையை நீக்கிவிட்டு தகுதியான சேர்க்கையாக மாற்றுவதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து
மாலி, புர்கினோ பாசோ மற்றும் நைஜர் ஆகியவை மூன்று நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளன. பிரான்சின் சதி மற்றும் வெளிப்புற ஆக்கிர மிப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவு வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தான தாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மீது வழக்கு
சிங்கப்பூரில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கின் கீழ் அவர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ள நிலையில், தற்போது சிங்கப்பூர் நீதிமன்றம் அவர் மீது நான்கு வெவ்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவுசெய்தது.
உயிரிழந்த மாணவியின் பட்டம் குடும்பத்தினரிடம் வழங்கப்படும்
ஆந்திரா கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி (23). அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள வட கிழக்கு பல்கலைக் கழகத்தில் முதுநிலை பயின்று வந்தார். கடந்த ஜனவரி 23ம் தேதி சாலையை கடக்கமுயன்றபோது போக்குவரத்துக் காவலரின் கார் மோதி உயிரிழந்தார்.