states

பொறியியல் சேர்க்கை: ரேண்டம் எண் வெளியீடு

சென்னை, ஜூன் 6- தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில்  மாணவர் சேர்க்கைக்கான சமவாய்ப்பு  எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட் டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த 1,87,693 மாணவர்களுக் கான ரேண்டம் செவ்வாயன்று (ஜூன் 6) வெளி யிடப்பட்டுள்ளது. இந்த ரேண்டம் எண் அடிப்படையில் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். நடப்பு கல்வியாண்டில், பொறி யியல் படிப்புகளுக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், 2.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள தாகத் தகவல்கள் வெளியாகின. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள்,

ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி  இயக்குநரகம் மூலம் இணையவழி யில் ஜூலை 2 ஆம் தேதி தொடங்க வுள்ளது. இதற்கான இணையதள விண்ணப் பப் பதிவு கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 4) முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2,28,122 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,86,209 விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,54,728 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் 17,129 விண்ணப்பங்கள் கூடுதலாக வந்துள்ளன. மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்ற ஜூன் 9 ஆம் தேதி வரை அவகாசமுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இதற்கிடையே, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம்  எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மாண வர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் இணையவழியில் ஜூன் 20ஆம்  தேதி வரை நடைபெறும். தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26 ல்  வெளியிடப்படும். கூடுதல் விவரங் களை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

;