சென்னை, மார்ச் 20 - பள்ளிக் குழந்தைகளை பரப்புரைக் கூட்டத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிறன்று கோயம்புத்தூரில் ரோடு ஷோ நடத்தினார். இந்த பரப்புரைக் கூட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை பள்ளிக் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் பாஜகவினர் நிற்க வைத்தனர். இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பள்ளிக் குழந்தைகளை தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் விதிமுறைகளை மீறி பங்கேற்க வைத்த பாஜகவினர் மற்றும் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாயன்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.