states

அதிகரிக்கும் என்கவுண்ட்டர் கொலைகள் அரசு தடுத்து நிறுத்த சிபிஎம் கோரிக்கை!

சென்னை, அக்.15- அதிகரித்து வரும் என்கவுண்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் 2023 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ. சண்முகம், மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பி னர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:

என்கவுண்ட்டர் சம்பவங்கள் தமிழகத்தில் சமீப காலத்தில் என்கவுண்ட்டர் மூலம் குற்றவாளி களை சுட்டுக் கொல்லும் சம்ப வங்கள் அதிகரித்து வருவது கவ லையளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1 அன்று  கூடு வாஞ்சேரியில் நடைபெற்ற என்  கவுண்ட்டரில் வினோத், ரமேஷ் ஆகிய இருவரும், செப்டம்பர் 16 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சோக்கண்டி பகு தியில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் விஷ்வா என்பவரும், அக்டோபர் 11 அன்று திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதி என்கவுண்ட்டரில் சதீஷ், முத்துசரவணன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும்போது குற்றம்  சுமத்தப்பட்ட சிலர் கை, கால்,  எலும்பு முறிந்து ஆஜர்படுத்தப்படு வதும், விசாரணையில், அவர்கள்  வழுக்கி கீழே விழுந்து அடிபட்ட தாக சொல்லப்படுவதும் நம்பும்படி யாக இல்லை. குற்றங்கள் அதிகரிக்காமல் தடுப்பதற்காக காவல்துறையும், தமிழக அரசும் உறுதியான நட வடிக்கைகள் மேற்கொள்வதுடன் வலுவான புலன் விசாரணை கட்ட மைப்பினை உருவாக்கிட வேண் டும். அதேசமயம் எப்படிப்பட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்டா லும், நீதிமன்றத்தில் நிறுத்தி குற்  றங்களை நிரூபித்து சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தர வேண்டுமே  ஒழிய, காவல்துறையினரே நேரடி யாக தண்டனை வழங்கும் நோக்  கோடு என்கவுண்ட்டர் கொலைகள் செய்வதை நாகரீக சமூகத்தால் அனுமதிக்க முடியாது. நடைபெற்றுள்ள என்கவுண்ட்டர் கள் மீது சட்டப்படியான விசா ரணை நடத்திடவும், மேலும் என்  கவுண்டர் கொலைகள் நடக்காமல் இருக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சம்பள பாக்கியை உடனே வழங்குக! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்  துள்ள பயனாளிகளுக்கான ஊதி யத்தை மாதக் கணக்கில் வழங்கா மல் காலம் தாழ்த்துவதை மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்  நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பருவமழை குறைவு, கர்நாட கத்திலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காதது கடுமை யான கிராமப்புற வேலையின்மை யை உருவாக்கியுள்ளது. அதோடு அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலையேற்றம் கிராமப்புற  ஏழைகளை வாட்டி வதைக்கும் நிலையில், வேலை செய்ததற் கான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பது மக்களை மேலும் வதைக்கும் செயலாகும். ஆகவே, ஒன்றிய பாஜக அரசு,  தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி களில், ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நிலு வையில் இருக்கும் சம்பள பாக்கி யை காலதாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும் என வலியு றுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் குறிப் பிடப்பட்டு உள்ளது.