states

குடியிருப்பு நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுத்திடுக! ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிடுக!

சென்னை,மே 6- ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி பலியான முத்துக்குமரன் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,  கழிவு அகற்றும் பணி யில் ஈடுபடுத்திய குடியிருப்பு நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை ஆவடியில் கழிவுநீர்த் தொட்டி யில் இறங்கி பணிபுரிய வைத்ததால் விஷ வாயு தாக்கி ஒரு தொழிலாளி மரணம்  அடைந்துள்ளார்.   திண்டிவனம் அம்மன்குளத்து மேடு கிராமம்  ஆறுமுகம் என்பவரின் மகன் முத்துக் குமரன் (28) ஆவடியில் பருத்திப்பட்டு, அசோக் நிரஞ்சன் நகரில் உள்ள ஆப்டிமா அடுக்ககத்தில்  எஸ்.டி.பி/ ஆப்ரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.

 மே 5 அன்று  காலை 11 மணியளவில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வளாகத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழமான கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் படி குடியிருப்பு நிர்வாகத்தினரால் அனுப்பப்பட்டுள்ளார்.  கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே முத்துக்குமரன் உயிரிழந்தார்.  இந்நிலையில் முத்துக்குமரனின் குடும்பத் தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில்  டி 6 ஆவடி காவல் நிலையத்தினர்  இந்தி யத் தண்டனைச் சட்டம் 337 மற்றும் 304(ஏ) ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.‌ ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்தோ அல்லது சம்பந்தப்பட்ட குடியிருப்பு நிர்வாகத்தினர் மீது எத்தகைய நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில மற்றும் வட சென்னை மாவட்டத் தலைவர்கள் க.சுவாமிநாதன், வி. ஜானகிரா மன், வழக்கறிஞர் ஆனந்தன்,முரளி, முரு கன், பிரதீப் பீமன், ராஜ்குமார் ஆகியோர் மருத்துவ மனைக்குச் சென்று முத்துக்கும ரன் தந்தை, சகோதரர், சகோதரி மற்றும் உற வினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.  பின்னர் ஆவடி காவல் ஆய்வாளரிடமும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பூபாலன் தலை மையில் சென்று கழிவகற்றும் பணியில்  மனி தரை ஈடுபடுத்தல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013  இன் கீழ் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண மும் நீதியும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.      பாதாளச் சாக்கடை மரணங்கள் அடுத்த டுத்து நடந்து வரும் நிலையில்  சட்டத்தை முறைாக அமலாக்க விரைவான நடவடிக்கை களை தமிழக அரசு எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.