சென்னை,செப்.16- தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனைப் பெறுவதில் வங்கிகளில் ஏற்படும் பிரச்ச னைகளை உடனடியாக களைய வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பெபி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் டி.ரவிக் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது; தமிழ்நாடு அரசு 2023 செப்டம்பர் 15 முதல் , மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளதை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மனதார வரவேற்கிறது. இதுவரை அங்கீகரிக்கப் படாத பெண்களின் உழைப்பை, திமுக அரசு முதல் முறையாக அங்கீகரித் துள்ளது என்பது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை. மாதா மாதம் ஒரு கோடிக் கும் கூடுதலான பெண்களுக்கு ரூ.1000/- வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பது அவர்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நம்பிக்கையை, நிம்மதியை ஏற்படுத்தும். வங்கி ஊழியர்களும் இந்தப் பணியில் மிகவும் மனமுவந்து தங்களை இணைந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். ஆனால் வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு இல்லை, குருஞ்செய்திக் கட்ட ணம் ஆகிய காரணங்களுக்காக, கணிச மான எண்ணிக்கையிலான பெண்களின் கணக்குகளிலிருந்து அவர்களுக்கு சேர வேண்டிய ஆயிரம் ரூபாயில் பெரும்பாலான தொகையோ, முழுவ துமோ அபராதத் தொகையாக பிடித்தம் செய்துள்ளன என்று தெரிய வருகிறது. 2018 முதல் 5 ஆண்டுகளில் 35000 கோடி ரூபாய் சாமான்ய மக்களிடமிருந்து அபராதக் கட்டணம் வசூல் செய்யப்பட் டுள்ளது என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் இந்த கட்டாய அபராதத் தொகை வசூலை வன்மையாக கண்டிக்கிறது. சாமானிய மக்களிடமிருந்து எந்த அபராதக் கட்டண மும் வசூல் செய்யக் கூடாது என்பதே இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிலைப்பாடு. தற்போது தமிழக அரசின் ஒரு முன்னேற்றகரமான திட்டத்தை செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைத் தொகை கிடைக்க விடாமல் வங்கிகள் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கி றோம். இதனை உடனடியாக சரி செய்து அனைத்து பெண்களுக்கும் அவர்களின் உரிமைத்தொகை முழுமையாக கிடைக்குச் செய்ய வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.