states

கல்வி தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 26 - கல்வி என்பது வெறும் பட்டமல்ல, அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது என்று தமிழக   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், இத்தகைய குணங்க ளையும் உருவாக்கக்கூடிய நிறுவன மாக இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.  கல்வியுடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கிறீர்கள், மாணவியரின் தனித்திறமைகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்து கொண்டிருக்கிறீர்கள். சமூக சேவையாற்ற கற்றுத் தருகிறீர் கள். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் இங்கு இருக்கின்றன. மேற்கத்திய இசை  மற்றும் நுண்கலை வரலாற்றில் இளங்கலைப் பட்டங்களையும், சமூகப் பணி மற்றும் இந்திய இசையில் முது கலைப் பட்டங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியதன் தனிச்சிறப்பு இந்தக் கல்லூரிக்கு உண்டு.

கூடுதலாக, ஆங்கிலம், பொருளாதா ரம் மற்றும் நுண்கலைகளில் எம்.ஏ. பட்டப்படிப்புகளை வழங்கிய சென்னை யின் முதல் மகளிர் கல்லூரி இந்தக்  கல்லூரியாக விளங்கிக் கொண்டிருக்கி றது. பரந்து பட்ட சமூக நோக்கமும், சேவை மனப்பான்மையும் இருப்பதால் தான் இத்தகைய வெற்றியை, வளர்ச்சியை உங்களால் அடைய முடிந்திருக்கிறது. தமிழகத்தில் இப்போது அமைந் துள்ள அரசானது, கல்விக்கு அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் கல்வியில் ஆற்றலில் மேன்மை அடைய, நான் முதல்வன் என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். உயர் கல்வியில் பொற்காலம் என்று சொல்லத் தக்க வகையில் உயர் கல்வியில் பல்வேறு முன்னெடுப்பு களை தமிழக அரசு செய்து வருகிறது. கல்வியில் - வேலை வாய்ப்பில் - தொழில் வளர்ச்சியில் - சமூக வளர்ச்சி யில் முன்னேறிய மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிக் காட்ட, தமிழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றும் முதல்வர்  கூறினார்.