states

வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு!

புதுதில்லி, ஜூன் 10 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத  அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. வெள்ளிக் கிழமையன்று மேலும் சரிந்து 77 ரூபாய் 85 காசுகள் என்ற வரலாறு காணாத சரிவுக்கு சென்றுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய மூலதனம் வெளியேற்றம் ஆகியவையே ரூபாய்  மதிப்பின் மோசமான சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ரஷ்யா -உக்ரைன் போரால் உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடை,  சர்வதேச வர்த்தகச் சந்தைகளை கடுமையாக பாதித்த நிலையில், அது இந்தியச் சந்தைகளி லும் எதிரொலித்து வருகிறது. ரஷ்யா, உலகின் மிகமுக்கியமான கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக திகழும் நிலை யில், அந்நாட்டுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தது, சர்வதேச கச்சா  எண்ணெய் சந்தையில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வர்த்தகத் தடை காரண மாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி விகிதம் சுருங்கிப் போனது. மறுபுறத்தில், ஓபெக் நாடுகளும் தங்களின் உற்பத்தியை அதிகரிப்ப தாக இல்லை.  தற்போது அமெரிக்கா உட்பட உலகம் முழு வதும் உள்ள கச்சா எண்ணெய் குறைந்தபட்ச இருப்பு குறைந்துள்ளது. ஜூன் 3 அன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் இருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் அளவு 89.31 மில்லியன் பேரல்களாக குறைந்துள்ளது. வேர்டெக்சா தரவின் படி, பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இதுவே மிகக்குறைந்த அளவாக பார்க்கப்படுகிறது

தற்போது ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்ட மிட்டுள்ளன என்றாலும், ஒபெக் நாடுகளிலேயே மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழும் சவுதி  அரேபியா ஜூலை மாதத்தில் இருந்து கச்சா  எண்ணெய் விலையினை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான விலை ஆபத்தான கட்டத்திலேயே உள்ளது. தற்போது விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடக்கு அட்லாண்டிக் கடலை மையமாக கொண்ட பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil), மற்றும் அமெரிக்க எண்ணெய் சந்தையை மையமாகக் கொண்ட மேற்கு டெக்சாஸ் இடைநிலை ( (West Texas Intermediate -WTI) கச்சா எண்ணெய் வியாழ னன்று காலை பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலரைத் தாண்டி விற்பனையானது. அடுத்த 12 மாதங்களுக்கு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 135 டாலருக்கு குறையாது ‘கோல்டுமேன் சாக்ஸ்’ போன்ற சந்தை தரவு  நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய  முன்னறிவிப்பை விட பீப்பாய்க்கு 10 டாலர் அதிகமாகும். 

இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி (சுக்ஷஐ) ரெப்போ வட்டி  விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி யது. இது ஐந்து வாரங்களில் இரண்டாவது வட்டி விகித அதிகரிப்பு ஆகும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவே இந்த நட வடிக்கை என்று கூறினாலும், இந்திய பங்குச் சந்தைகளில் அது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள், இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியேறத் துவங்கியுள்ளனர்.  இந்த வார வர்த்தகத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமையன்றும் இந்தியப் பங்குச் சந்தைகள் பலத்த அடிவாங்கின. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் ஒரேநாளில் 1,016.84 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தை யான நிப்டி 276 புள்ளிகளை சரிந்தன. இவற்றின் காரணமாக டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பும் 77.85 காசுகளாக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.  இதனிடையே, இந்திய ரூபாய் மதிப்பு இருண்ட குளிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அடுத்த 5 முதல் 6 மாதங்களில் அது 81 ரூபாய் வரை சரிவைச் சந்திக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.