சென்னை, ஆக. 2- நவீன தொழில்நுட்பத்தால் சந்தை யில் பொருட்கள் குவியும். வேலை யின்மையால் அவற்றை வாங்க மக்க ளிடம் பணம் இருக்காது. இதன் மூலம் ஒரு கடுமையான அழுத்தம் ஏற்படும் என கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் எச்சரிக்கை விடுத்தார். சென்னையில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர் கள், மாதர், வாலிபர், மாணவர் சங்கங் கள் உள்ளிட்ட 25 அமைப்புகள் ஆகஸ்ட் 1 திங்களன்று சென்னையில் சிறப்பு மாநாடு நடத்தின. சமூக பாது காப்புடன் கூடிய வேலையை அடிப் படை உரிமையாக்க வலியுறுத்தி நடந்த இம்மாநாட்டில் கே.என்.பாலகோபால் ஆற்றிய உரையின் அம்சங்கள் வருமாறு: அனைவருக்கும் பாதுகாப்பான, கண்ணியமான வேலை வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. உல கம் முழுவதும் வேலை வாய்ப்பு பிரச்ச னை பெரிய அளவில் முன்னுக்கு வந்துள்ளது. முழுநேர வேலை அல்லா மல் பகுதி நேர வேலையாக உள்ளது. கூலி முறையாக கிடைப்பதில்லை, ஒப்பந்த பணியாக இருக்கிறது. ராணு வத்தில் கூட ஒப்பந்த முறையில் நிய மனம் நடக்கிறது. இந்தியாவில் அக்னிபாத் என்கிற பெயரில் 4 ஆண்டுகள் ஒப்பந்த முறை நியமனம் செய்யப்படுகிறது. ராணுவ மும், போலீசும் நிரந்தர வேலை. அதில் கூட ஒப்பந்த முறை நியமனம் என் றால் அடிப்படைக் கட்டமைப்பிலேயே மாற்றம் ஏற்படுகிறது என்று பொருள்.
நிரந்தரப் பணியே இல்லை என்றால்...
உலகம் முழுவதும் இதுபோல் நிரந் தரப் பணி இல்லை என்கிற நிலை ஏற்படும்போது நிலைமை மோசமா கும். ஏராளமான தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன. மனிதத் தேவை யே இருக்காது. டெஸ்லா போன்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவுக்கு வந்து சென்னையில் மின்சார கார் தயா ரிக்கிறது. ஓட்டுநர் இல்லாத கார் 5 கோடி, 10 கோடி ரூபாய் மதிப்பில் தயா ரிக்கிறார்கள். பேராசிரியர்கள், கல்லூ ரிக்கு ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்யலாம். அடுத்ததாக பேராசிரி யரின் பணியிடமே தேவையற்றதாக மாறும்.
தொழில்நுட்பம் எதற்கு பயன்பட வேண்டும்?
சாதாரணமாகவே ஸ்மார்ட் போனில் நாம் ஏதேனும் தேடினால் அது தொடர்பான தகவல்கள் தானாக வந்து நிற்கிறதே, இது செயற்கை நுண்ண றிவுதான். நான் ஒரு சோதனை மேற் கொண்டேன் அரிக்கொம்பன் யானை குறித்து ஒரு கதையை ‘செயற்கை நுண்ணறிவு’ செயலி மூலம் பெற முயற்சித்தேன். சின்னதாக 2 பத்தியில் ஒரு கதையை உருவாக்க முடிந்தது. அப்படியென்றால் புதினம், திரைக் கதை என்பதெல்லாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலமே பெற முடியும். நாம் தொழில் நுட்பத்திற்கு எதிரான வர்கள் அல்ல. நமக்கு தொழில்நுட் பம் தேவை. அது எப்படி இருக்க வேண்டும் என்றால் வேலைப்பளு வையும் பணிநேரத்தையும் குறைப் பதாக இருக்க வேண்டும். அறிவும் நுண்ணறிவும் அதற்கு பயன்பட வேண்டும். மாறாக 60 ஆயிரம் பேர் பணிபுரிந்த நிறுவனங்களில் 600 பேர் போதும் என்கிற நிலை உருவாக்கப்படு கிறது.
ஒருமுறை வெளிநாட்டு விமான பய ணத்தின்போது வளைகுடா நாட்டில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அந்த நிறுவனத்தில் ஊழியர் எண்ணிக்கையை பத்து சதவிகிதமாக குறைத்து உற்பத்தியை இரட்டிப்பாக்கி உள்ளதாக கூறினார். தொழில்நுட்பம் வளரும்போது வேலை வாய்ப்பும் பணப்பரிமாற்றமும் பறிபோகிறது.
யாருக்கு பலன்?
இந்தியாவில் 40 சதவிகித சொத்துகள் வெறும் ஒரு சதவிகிதம் பேரிடம் உள்ளது. 50 சதவிகிதம் மக்களிடம் மொத்த சொத்தில் 3 சதவிகிதம் மட்டுமே உள்ளது. தொழில் நுட்பத்தின் பலனையும், பெரு மளவிலான பணத்தையும் ஒரு சிறு பகுதியினர் அனுபவிக்கும்போது, பெரும் பான்மையாக உள்ள மக்களுக்கு வேலையும் இல்லை பணமும் இல்லை. நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்படும் பொருட்களை நுகர பணம் தேவை. சந்தையில் பொருட்கள் குவியும் அவற்றை வாங்க மக்களிடம் பணம் இருக்காது. இதன் மூலம் ஒரு அழுத்தம் ஏற்படும்.
மாநிலங்களை வஞ்சிக்கும் பாஜக அரசு
தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய விகிதத்தை தர மறுக்கிறது. நூறு ரூபாய் வருவாயில் 63 ரூபாயை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. மீதம் உள்ள 37 ரூபாய்தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தியாவின் செல வினத்தில் 60 சதவிகிதம் மாநில அரசுக ளால் மேற்கொள்ளப்படுகிறது. கேரளத்தில் 62 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு உதவி யாக மாதம் ரூ.1600 வீதம் வழங்கப்படு கிறது. இதை ஏன் கொடுக்கிறீர்கள் என்று ஒன்றிய அரசு கேள்வி எழுப்புகிறது. வரி வசூலிக்கும் மாநில அரசின் உரிமை கள் அனைத்தும் ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டது. 30 சதவிகிதம் இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இது கேர ளத்தில் 0.5 சதவிகிதமாக உள்ளது. தமிழ்நாடு மேம்பட்ட நிலையில் 2 ஆவது இடத்தில் உள்ளது. வறுமைக்கோடுக்கு கீழ் 40 சதவிகிதம் மக்கள் வாழும் மாநி லங்கள் இந்தியாவில் உள்ளன. குறைந்த பட்ச சராசரி சம்பளம் அதிகம் பெறும் மாநிலமாக கேரளம் உள்ளது. நமக்கு கண்ணியமான வேலையும், வாழ்வதற்கு குறைந்தபட்ச சம்பளமும் தேவை. அதற்கான கோரிக்கையை முன் வைத்து தொழிலாளிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என அனைத்து பகுதியினரும் ஒன்றிணைந்து போராடும் இந்த கூட்டமைப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கே.என். பாலகோபால் பேசினார்.
தமிழில் : சி.முருகேசன்