சென்னை, மே 24- ரயில்வே அச்சகங்களை மூடும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.அரிலால் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் அச்சகம் உள்ளிட்டு தில்லி, மும்பை, ஹவுரா, செகந்திராபாத் உள்ளிட்ட 5 ரயில்வே அச்சகத்தை மூடுவது என ரயில்வே முடிவெடுத் துள்ளது. பயணிகளின் பயணச்சீட்டு, முன்பதிவு டிக்கெட்டுகள், பயணி களின் படிவங்கள், ஊழியர் சம்பந்த மான பல்வேறு படிவங்களையும் திறம்பட குறித்த நேரத்தில் அச்சிட்டு மக்கள் சேவை செய்து வரும் இந்த அச்சகத்தை மூடுவது என ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, இதற்கு முன்பு இரண்டு முறை இந்த அச்சகங்களை மூடுவது என எடுத்த முடிவு தொழி லாளர்களின் எழுச்சியான போராட் டங்களினால் தள்ளி வைக்கப் பட்டது. மேலும், இந்த அச்ச கத்தை நவீனப்படுத்தும் நோக்கோடு 2015ஆம் ஆண்டு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்பெயின் நாட்டிலிருந்து நவீன உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தேவையான உதிரிபாகங்கள் மற்றும் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து குவித்து வைக் கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் அச்ச கங்களை மூடுவதை டிஆர்இயூ வன்மையாக கண்டிக்கிறது. மேலும், ராணுவத்திற்கு பிறகு அதிகமான நிலங்களைக் கொண்ட ரயில்வேயின் இடங்களை கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் நோக்கமும் இதன் பின்புலத்தில் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரயில்வே அமைச்ச கத்துடன் பேசி தலையிடுவதோடு, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை குறித்து குரல் எழுப்ப வேண்டும் என டிஆர்இயூ கோருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.