states

பல்லக்கு தூக்கும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: அமைச்சர்

சென்னை,மே 4- தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப் பிரவேசம் குறித்து  விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிர வேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்திருப்பது குறித்து சட்டப்பேரவையில் புத னன்று (மே4) அதிமுக, காங்கி ரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எழுப்பிய பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதில் அளித்து பேசுகையில், “ தமிழ்நாடு முழுமைக்கும் சைவம், வைணவம், சக்தி பீட வழிபாடு என்று 45 மடங்கள் இருக்கிறது. தரு மபுரம் ஆதீனம் பட்டி னப் பிரவேசத்திற்கு மாவட்ட  நிர்வாகம் தடை விதித்தி ருப்பது குறித்து ஆதீனங்க ளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், இதில் நாங்கள் எதிர்மறை யான கருத்து எதையும் சொல் லவில்லை. இருந்தாலும் ஒரு சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கு தூக்கும் நிகழ்வையும் அரசியலாக்கப் பார்க்கி றார்கள். எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும் என்று முதல மைச்சர் தெரிவித்திருக் கிறார்” என்றார். இந்த பிரச்சனையை நீதி மன்றத்திற்கும் கொண்டு செல்கிறார்கள். எனவே,  நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்ளும். அதே நேரத்தில், மனிதனை மனிதனே பல்லக்கில் தூக் குவதை ஏற்க முடியாது. மனிதநேயத்தை பாது காக்க மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்றும் பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடை பெறும். எனவே, கால அவகா சம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.