states

img

திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு வைகையில் இருந்து தண்ணீர் திறப்பு!

மதுரை, நவ. 10 - திண்டுக்கல், மதுரை மாவட்டங்க ளிலுள்ள பெரியாறு இரு போக சாகு படி நிலங்களின் முதல் போக பாசனத் தேவைக்காக, வைகை அணையில் இருந்து வெள்ளிக்கிழமையன்று தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பர் 10 முதல் 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கன அடி விகித மும், அதன்பிறகு 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தொடர்ந்து  தண்ணீர் திறக் கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தி லுள்ள 26 ஆயிரத்து 792 ஏக்கர், வாடிப் பட்டி வட்டத்திலுள்ள 16 ஆயிரத்து 452 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தி லுள்ள 1797 ஏக்கர் என மொத்தம் 45  ஆயிரத்து 041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் தண்ணீரைத் திறந்து விட்டு, மலர்களைத் தூவினர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 70.60 அடியாக உள்ளது. 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி நீரை அணை யில் தேக்க முடியும் என்ற நிலையில், அணையில் தற்போது 5 ஆயிரத்து 890 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 816 கன அடி நீர்வரத்து உள்ளது. 130 அடியை எட்டும் பெரியாறு அணை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 129.10 (மொத்த உயரம் 152 அடி) அடியாகவும், நீர் இருப்பு 4,503.50 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,853 கன அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு விநாடிக்கு 105 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை  நீர்மட்டம் 57.18 அடி மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 57.18 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 14 ஆயிரத்து 971 கன அடி வந்து கொண்டிருந்த நீர், விநாடிக்கு 11 ஆயிரத்து 445 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.