கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு
சென்னை, ஜூன் 17- நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதை கண்டித்தும், தில்லி யில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல்துறை யினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை யில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடை பெற்றது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரி டையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்ட னர். இதனையடுத்து காவல்துறையி னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அனுமதி பெறாமல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலை வர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு உட்பட 277 பேர் மீது கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி தேர் விபத்து: பலி 3 ஆக உயர்வு
தருமபுரி,ஜூன் 17- தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே நிகழ்ந்த தேர் விபத்தில் காய மடைந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பென்னாகாரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளி கிராமத்தின் காளியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை ஒட்டி கடந்த 13 ஆம் தேதி மாலை தேரோட்டம் நடை பெற்றது. வழக்கமாக தேரோடும் பாதை யில் சுற்றி வந்த தேர், தேர்நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தேரின் அச்சு கழன்றதில் பக்தர்கள் கூட்டத்தில் முன்னோக்கி தேர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தேரின் கீழே சிக்கி பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த மனோ கரன்(57), முருகன்(60), மாதேஷ்(60), மாதே அள்ளியைச் சேர்ந்த மாதேஷ் (45), பெருமாள்(53), பாப்பிநாயக்கன் அள்ளியைச் சேர்ந்த சரவணன்(50) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்த னர். மேலும் சிலர் காயங்களுடன் உயிர் தப்பினர். பலத்த காயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், மனோகரன், சரவணன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பெருமாள் என்பவரை மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கும் சிகிச்சை பலனின்றி வெள்ளி யன்று(ஜூன் 17) உயிரிழந்தார். இது தொடர்பாக, பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் விலை அதிகரிப்பு
சென்னை, ஜூன் 17- தங்கம் விலை கடந்த சில நாட்களா கவே ஏற்ற இறக்கமாக காணப்படு கிறது. வியாழக்கிழமை (ஜூன் 16) ஒரு சவரன் தங்கம் ரூ.38,040க்கு விற்கப் பட்டது. அது வெள்ளியன்று (ஜூன் 17) சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.38,200-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.4,775க்கு விற்கப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் அதிகரித் துள்ளது. கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.67க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,000க்கு விற்கப்படு கிறது.