states

ஜூலை 31 இல் தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 24- மணிப்பூரில் பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் வல்லு றவுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண டித்து ஜூலை 31 அன்று அனைத்து மலைப்பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பி.டில்லி பாபு மற்றும் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில்,”மணிப்பூர் மாநி லத்தில் பாஜக - ஆர்எஸ்எஸ் சங்பரி வார் அமைப்புகளின் தூண்டுதலால் அப்பாவி குக்கி - ஜோமி, நாகா பழங்குடி  இன மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இத்  தகைய கொடூரமான வன்முறையில் ஈடுபட்ட ஒரு கும்பல் இரண்டு பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது. இக்கொடூர அக்கிர மத்தை தட்டிக் கேட்ட இளம் பெண்ணின் தந்தை, சகோதரனையும் பாசிசக்  கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. மேலும் பைரேன்சிங் தலைமையிலான ஆளும் பாஜக அரசு இச்சம்பவத் தினை மூடி மறைத்திட முயற்சித்தது டன் அல்லாமல் மாநில காவல்துறை யினரே இக்கொடூர சம்பவத்திற்கு துணை போயுள்ளது கடும் கண்ட னத்திற்குரியதாகும். ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசும், பிரச்சனையை அமைதிப்படுத்த முயற்சிக்கவில்லை. மலைகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்திட  எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது  போல் அவர்களின் நடவடிக்கை உள்ளது. 200-க்கும் மேற்பட்ட தேவா லயங்களை இடித்தும், வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியதோடும் அல்லா மல், விளைநிலங்களையும் அழித்துள் ளனர். பழங்குடி பெண்களை நிர்வா ணப்படுத்தி கும்பல் வல்லுறவு செய்தது  மட்டுமல்லாமல், மேலும் இரண்டு பழங்குடி பெண்களை கும்பல் வல்லு றவுக்கு உள்ளாக்கி எரித்துக் கொலை  செய்த சம்பவம் திடுக்கிட வைக்கிறது. தினமும் மணிப்பூரில் பழங்குடி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு  வருகின்றன. இத்தகைய செயல் களை தடுத்து நிறுத்திடாத மாநில  முதல்வர் பதவி விலகிட கோரியும், நிர்வாணப்படுத்தி கும்பல் வல்லுற வில் ஈடுபட்ட அனைத்து காட்டுமிராண்டி களையும் கைது செய்து கடும் தண்  டனை வழங்கிட கோரியும் தமிழ்நாட் டின் அனைத்து மலைப்பகுதிகளில் ஜூலை 31 அன்று கண்டன ஆர்ப் பாட்டங்களை நடத்திட வேண்டும் என   தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.