states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ராகுல் நடைபயண நிறைவு விழாவுக்கு அனுமதி!

மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக-வின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக,  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்கள் ஒற்றுமைப் பயணத்தை மேற் கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ஆம் தேதி துவங்கிய இந்தப் பயணம், ஜன வரி 30 அன்று காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவுபெற உள்ளது. இதில் 23 கட்சி களின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீநகரில்  நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத் துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜ்னி பட்டீல் தெரிவித்துள்ளார்.

ஜே.பி, நட்டா பதவிக் காலம் 2024 வரை நீட்டிப்பு!

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி தலைமையில் 2024-ஆம்  ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வென்று ஆட்சி அமைக்கும் என வும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

சிரிய எண்ணெய் வளம் சூறையாடல் அமெரிக்கப் படைகள் அட்டூழியம்

டமாஸ்கஸ், ஜன.17- சிரியாவின் பல பகுதிகளில் தனது ஆக்கிர மிப்பினை மேற்கொண்டு, எண்ணெய் வளத்தை அமெரிக்க ராணுவம் கொள்ளையடித்து வரு வது தொடர்கிறது. அமெரிக்க ராணுவம் மற்றும் அதன் ஆதரவு  சிரிய அரசு எதிர்ப்புக்குழுக்கள் ஆகியவை இணைந்து 53 எண்ணெய் வாகனங்கள் மூலம் எண்ணெய் எடுத்துச் சென்றிருக்கின்றன. சிரியாவின் வடகிழக்கு மாகாணமான ஹசகா வில் இருந்து அருகில் உள்ள இராக்கிற்கு இந்த வண்டிகள் சென்றுள்ளன. இத்தகைய கொள்ளைகள் தொடர்கின்றன. இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி விட்டதாகச் சொல்லப்பட்டாலும், சிரியாவின் எல்லைக்கருகே உள்ள முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அந்த முகாம்களுக்குதான் சிரியாவில் இருந்து எண்ணெய் கடத்தப்படுகிறது. பின்னர், அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு கொள்ளையடிக்கப்பட்ட எண்ணெய் மாற்றப்படு கிறது. இவற்றைக் கொண்டு செல்லும் வாக னங்களுக்கு அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகள் பாதுகாப்பு தருகிறார்கள். அமெரிக்க ராணுவ மும் அந்தப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடு கிறது. அமெரிக்கக் கொடிகள் பறக்கும் வாகன ங்களும் இதில் எண்ணெய் எடுத்துச்செல்கின்றன. இராக் மற்றும் சிரியா எல்லையில் அமெரிக்க முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது சிரியாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்கத்தான் என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முறை ஒப்புக் கொண்டிரு ந்தார். தற்போது 53 வாகனங்களில் எண் ணெய் ஏற்றி கடத்திச் சென்ற சம்பவம், அந்தக் கொள்ளை இன்னும் தொடர்வதையே காட்டுவ தாக சிரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

50 நாட்களாக போராடும் விவசாயிகள்: மாநிலம் முழுவதும் ஜன.21 ஆதரவு  ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜன.17- கடந்த 50 நாட்களாக போராடி வரும் ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவ சாயிகள் கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி ஜனவரி 21 ல் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் ஆரூரான் சர்க்கரை ஆலையும், கடலூர் மாவட்டம், சித்தூரில் இயங்கி வந்த ஆரூரான் சர்க்கரை ஆலையும், 2019 முதல் கடந்த நான்காண்டு  காலமாக செயல்பட வில்லை. ஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு  விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ.112 கோடி கரும்பு பணம் பாக்கியை தராமல் தேசிய கடன் தீர்ப்பாயத்திற்கு சென்று விட்டது. இது தவிர ஆரூரான் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் மோசடியாக ரூ.200 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் ஆரூரான் சர்க்கரை ஆலையை தேசிய கடன் தீர்ப்பாயத்தின் மூலம் கால்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ஏற்கனவே செயல்பட்ட ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமை யாக தராமல் ஆலையை இயக்குவதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகள் எடுத்துக் கொண்ட கடன் தொகையை விவ சாயிகள் பெயரில் இருந்து ஆரூரான் சர்க் கரை ஆலைகள் பெயரில் மாற்ற வேண்டும். விவசாயிகளை கடன் வலையிலிருந்து விடு விக்க வேண்டும். கரும்பு பண பாக்கி முழுவதையும் வட்டி யுடன் விவசாயிகளுக்கு வழங்க மாநில அரசு உடனடியாக தலையிட்டு திரு மண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை  முன்பு 49 நாட்களாக தொடர் போராட்டத் தில் பங்கேற்றுள்ள கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத் தியும் ஜன.21 அன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோட்ட அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங் களில் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்க  வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

க.பொன்முடியின் சகோதரர் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை,ஜன.17- தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் சகோதரரும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் (65)  உடநலக்  குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் அமைச்சர் க. பொன்முடிக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக் கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கி றேன்”என தெரிவித்திருக் கிறார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது

சென்னை,ஜன.17- சென்னையில் ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது.  கடந்த மாதம் சவரன் ரூ.39 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை படிப்படி யாக உயர்ந்து தற்போது ரூ.42 ஆயிரத்தை தாண்டி யுள்ளது. இந்த சூழ்நிலையில், செவ்வாயன்று(ஜன.17)தங்கம் கிராமுக்கு 12 ரூபாயும்  சவரனுக்கு ரூ.96-ம் குறைந்து ள்ளது. தற்போது ஒரு சவரன் ரூ. 42,440க்கு விற்கப்படு கிறது. இதே போல வெள்ளி விலையும் குறைந்து இருக் கிறது. கிராம் ரூ.75.80-ல் இருந்து ரூ.75.30 ஆகவும், கிலோ ரூ.75,800-ல் இருந்து ரூ.75,300 ஆகவும் குறைந்துள்ளது.

மாடு முட்டி தொழிலாளி பலி

தி.மலை,ஜன. 17- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் விழாவை யொட்டி காளை விடும் விழா நடைபெற்று வருகிறது. குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (50). கூலி தொழிலாளியான இவர் கடந்த 15ஆம் தேதி கீழ்பாலூர் கிராமத்தில் நடந்த காளை விடும் விழா வை வேடிக்கை பார்க்கச் சென்றார். அப்போது காளை  ஒன்று கார்த்தி மீது முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் வழி யிலேயே உயிரிழந்தார்.

உலகச் செய்திகள்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நல்ல நிலையை அடைந்திருக் கிறது. அனைத்து வகையான பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி அன்றாடம் 22 லட்சத்து 30 ஆயிரம் பீப்பாய்கள் ஆக உயர்ந்துள்ளது. பொருளாதாரத் தடைகள் போடப்படுவதற்கு முன்பு இந்த நிலைதான் இருந்தது. தற்போது மீண்டும் அதை ஈரான் எட்டியிருக்கிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி மூலமாக ஈரானுக்குக் கிடைத்து வந்த வருமானமும் பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது.

தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வந்த ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிறிஸ்டின் லாம்பிரெச்ட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். உக்ரைன் பிரச்சனையில் அவர் போதிய அளவு தலையிடவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அங்குள்ள துயரங்களைச் சரியான வகையில் அவர் படம் பிடித்துக் காட்டவில்லை என்று குறை கூறப்பட்டதால், தன்னைப் பதவியிலிருந்து விடுவித்து விடுமாறு அதிபர் ஓலப் ஸ்கோல்சிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு ஜப்பானின் ஆயுத  விற்பனை நிறுவனங்கள் பெரும் அளவில் நிதி அளித்திருக் கின்றன. 2021 ஆம் ஆண்டில் அக்கட்சிக்கு, ஜப்பானின் முன்னணி ஆயுத விற்பனை நிறுவனங்கள் மூலமாக 16 கோடியே 62 லட்சம் யென் நிதி கிடைத்துள்ளது. இதில் நிதி தந்துள்ள பத்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறை கொள்முதலில் 61 விழுக்காட்டை வைத்துள்ளன. ஆயுதக் கொள்முதலில் கூடுதல் கவனம் செலுத்தும் முயற்சியில் தற்போதைய அரசு இறங்கியிருப்பது இந்த நிதிவரத்தால்தான் என்று கூறப்படுகிறது.