சென்னை,ஏப்.22- தில்லி, ஜஹாங்கீர்புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் இடிப்பிற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மை யான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப் பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தில்லியில் உள்ள ஜஹாங்கீர் புரி என்ற இடத்தில் முஸ்லிம் கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் ஒன்றிய பாஜக அரசு புல்டோ சரைக் கொண்டு அவர்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து தள்ளி யுள்ளது. முன்னதாக ஹனுமான் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பஜ்ரங் தளத்தினர் மசூதிகள் முன்பாக கத்தி கோஷமிட்டு வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மத விரோத கண்ணோட் டத்தோடு முஸ்லிம்களுக்கு எதிராக இந்த கொடுஞ்செயலை அரங்கேற்றியுள்ளது. இந்த அராஜக, வெறிச் செயலை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாற்காலிகள் அகற்றுவதற்கு புல்டோசர் எதற்கு என்ற கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வைக்கும் போது, அதற்கான பதில் அரசிடம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் பிருந்தா காரத் உடனடியாக தலையிட்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்று நீதிமன்ற ஆணையை காண்பித்து இடிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளார். அவருக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ச்சி யாக ஒவ்வொரு மாநிலத்திலும் இதேபோன்று இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சங்பரிவார் அமைப்புகளும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவும் செய்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் உள்ள மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகள் கண்டிக்க முன்வர வேண்டுமென்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வற்புறுத்துகிறது. தமிழகத்திலும் இத்தகைய சக்திகள் ஆங்காங்கே மத மோதலை கிளப்பிவிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக மக்கள் இத்த கைய மதவாத சக்திகளுக்கு எதிராக வலுவாக குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.