states

img

தில்லி தீ விபத்து 30 பேர் பலி; 40 பேர் படுகாயம்

தில்லி, மே 14- மேற்கு தில்லி முண்டக் பகுதியின்  மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகக் கட்ட டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயி ரிழந்தனர். இந்தச் சோக நிகழ்வு தொடர்  பாக கட்டடத்தில் இருந்த சிசிடிவி கேமரா அலுவலகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இரு வரை காவல்துறையினர் கைது செய்  துள்ளனர். கட்டடத்தில் தீ தடுப்பு, பாது காப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்  கொள்ளப்படாததால் அக்கட்டடத்தின் உரிமையாளர் மனீஷ் லக்ராவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 24 தீயணைப்பு வாக னங்கள் போராடி தீயை அணைத்தன. மூன்றடுக்கு கொண்ட வணிக வளா கத்தில் இருந்து 27 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. கட்டடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ள நிலையில், இவர் களில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் அனை வரும் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள  சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயா ரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீய ணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், விபத்து நேர்ந்தபோது கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் மோட்டிவேஷனல் ஸ்பீச் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ளது. அந்த தளத்திலேயே அதிக உயிரிழப்பும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. சனிக்கிழமை காலை செய்தியா ளர்களிடம் பேசிய மீட்புத்துறை அதி காரியொருவர், “இன்னும் இரண்டு அல்லது மூன்று பேர் உடல்கள் இருப்ப தற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 30-ஐ  எட்டக்கூடும்” என்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தீவிபத்தில் இறந்தவர் களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிர தமர் மோடி, “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்”  என்று கூறியதுடன், உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்  சம் வழங்கப்படும் எனவும் அறிவித் துள்ளார்.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் இரங்க லைப் பதிவு செய்துள்ளனர்.