இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 3 அன்றுடன் முடிவடைந்த வாரத்தில் 30.60 கோடி டாலர்கள் குறைந்து, 60 ஆயிரத்து 100 கோடி டாலராக சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மே 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 385.40 கோடி டாலர்கள் உயர்ந்தது. அதற்கு முந்தைய வாரம், 423 கோடி டாலர்கள் உயர்ந்தது. இந்நிலையில், வெளிநாட்டுக் கரன்சி சொத்து மதிப்பு (எப்சிஏ) குறைவு மற்றும் தங்கம் கையிருப்பு 7.40 கோடி டாலர்கள் அளவிற்கு குறைவு ஆகியவையே அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்று கூறப் பட்டுள்ளது.