மதுரை, ஜூலை 3- இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண் அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையில் ஜனாதி பதி கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து, அத்தியாவசியப் பொருட் கள், உணவுப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண் டாடுகின்றனர். அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமி ழகத்துக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை யில் இருந்து கடந்த 27ஆம் தேதியன்று இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி - பெரியண்ணன்(சிவன்) என்ற வயதான தம்பதியர் தனுஷ்கோடி அருகே கடற் கரையில் மயங்கிய நிலை யில் கிடந்தனர். இருவரின் உடல்நலத்தை பரிசோதித்த போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டு கடந்த ஒரு வாரமாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.இந்நிலை யில் ஜூலை 3 ஞாயிறன்று காலை பரமேஸ்வரி (70) சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். பரமேஸ்வரியின் கணவன் பெரியண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.