states

கடலூர் பட்டாசு ஆலை விபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் படுகாயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளித்திடுக!

சென்னை, ஜூன் 24- கடலூர் பட்டாசு ஆலை விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். படு காயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை  கிடங்கில் ஏற்பட்ட விபத்து காரண மாக பட்டாசு ஆலை ஊழியர்களான சித்ரா, அம்பிகா, சத்தியராஜ் ஆகி யோர் சம்பவ இடத்திலேயே பலி யாகினர். மற்றொரு ஊழியரான வசந்தாவும், பட்டாசு வாங்க வந்தி ருந்த வைத்தியநாதன் என்பவரும்  பலத்தக் காயத்துடன் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இந்த விபத்தில் மூவர் பலி யானது மிகவும் கவலைக்குரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப காலமாக பட்டாசு ஆலை  மற்றும் சேமிப்பு கிடங்குகளில் விபத்து ஏற்படுவதும், உயிர்ப்பலி யாவதும் தொடர்கதையாக உள் ளது.

பட்டாசு தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்குகள் உரிய பாது காப்பு ஏற்பாடுகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  தற்போது கடலூர் மாவட்டம் எம். புதூர் கிராமத்தில் பட்டாசு சேமிப்பு  கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி யான மூன்று பேரின் குடும்பங்க ளுக்கு தமிழக அரசு உடனடியாக உதவித் தொகையாக ரூ. 3 லட்சம் என அறிவித்தது போதுமானதல்ல. உதவித் தொகையாக ரூ. 25 லட்சம் அளிப்பதோடு, உயிரிழந்த வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு பணி வழங்க வேண்டுமென வும், படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டாசு ஆலை ஊழியரான வசந்தா விற்கும், பட்டாசு வாங்க வந்த வைத்தியலிங்கத்திற்கும் உயரிய சிகிச்சையும், உரிய இழப்பீடும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு  தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.