மார்ச் 21-இல் ஜனாதிபதி கன்னியாகுமரி வருகிறார்
புதுதில்லி, மார்ச் 15- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மார்ச் 21 அன்று கன்னியாகுமரி வரு கிறார். இங்கு கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பகல் 12.30 மணிக்கு சுற்றிப் பார்க்கிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் இரு க்கும் அவர், அதன்பின்பு கன்னியாகுமரி சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு ஓய்வுக்குப் பின், மாலை 3 மணிக்கு கன்னியா குமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண தரிசன சித்திரகூடத்தை பார்வை யிடுகிறார். அதன்பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் முர்மு, தரிசனத் தைக் முடித்துக்கொண்டு தில்லி திரும்புகிறார்.
குற்றவியல் சட்டங்கள் திருத்தப்பட இருக்கின்றன பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்
புதுதில்லி, மார்ச் 15- குற்றவியல் சட்டங்கள் திருத்தப்பட இருக்கின்றனவா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைக்குழு தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்துகொண்டிருக்கிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், இந்திய சாட்சியச் சட்டம் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர அரசு உத்தேசித்திருக்கிறதா, அதன் விவரங்கள் என்ன, பிரிட்டி ஷார் காலத்துச் சட்டங்களான இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்காக அரசு ஏதேனும் குழுக்கள் அமைத்திருக்கிறதா, அதன் விவரங்கள், அதற்கான காரணங்கள் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஒன்றிய உள்துறை விவகாரங்களின் இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா எழுத்துமூலம் அளித்துள்ள பதில் வருமாறு: உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய 146ஆவது அறிக்கையில் நாட்டின் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பு திருத்தப்பட வேண்டியது அவசியம் என்று பரிந்துரைத்திருந்தது. அதன்பின்னர் இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக தில்லி, தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டது. உள்துறை விவகாரங்களின் அமைச்சகமும் குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் சம்பந்தமாக ஆளுநர்கள், துணை ஆளுநர்கள், மாநில அரசாங்கங்கள், யூனியன் பிரதேச அரசாங்கங்கள், பல்கலைக் கழகங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம், பல்வேறு மாநில வழக்கறிஞர்கள் சங்கம், பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் களிடம் ஆலோசனைகள் கோரி இருந்தது. இவ்வாறு பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அரசு முடிவு செய்திருக்கிறது. ஆயினும் இதற்குக் காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. (ந.நி.)
8 பேர் கொண்ட குழு அமைப்பு
புதுதில்லி, மார்ச் 15 - உடல்தானம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்தானம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உடல்தானம் செய்ய விருப்பம் உள்ளவர்களை கண்டறிய தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை 8 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
லாலு பிரசாத், மனைவி, மகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன்!
ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோருக்கு தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புதனன்று ஜாமீன் வழங்கி யுள்ளது. லாலு பிரசாத், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே குரூப்-டி வேலைக்காக, சிலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றார் என்று மோடி அரசு குற்றச்சாட்டு வைத்தது.
3 ஆண்டுகளில் 436 ஆயுதப் படை வீரர்கள் தற்கொலை!
2020 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய காவல் படை என மொத்தம் 436 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதில், 2020-இல் 144 பேரும், 2021-இல் 157 பேரும், 2022-இல் 135 பேரும் தற்கொலை செய்து உள்ளனர். அதிகபட்ச மாக சி.ஆர்.பி.எப். வீரர்களில் 154 பேர், பி.எஸ்.எப். வீரர்கள் 111 பேர் தற்கொலை செய்து கொண்டுள் ளனர் என்று ஒன்றிய அமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
தேர்வு எழுதாதவர்களுக்கு மறுத்தேர்வு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பெரம்பலூர், மார்ச் 15- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வை எழுதாத மாணவர்களுக்காக மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய அவர், “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது வருகிறது. இதில் தமிழ் பாடத்தேர்வில் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகல்வித் துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுத்தேர்வு நடத்தி தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும். அதற்கான நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மேற்கொள் வார்”என்றார். இந்த பேட்டியின்போது போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
இரண்டாவது முறையாக உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு!
சென்னை,மார்ச் 15- தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டி லிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்க லாம் என்று மின்சார வாரியம் தெரிவித் துள்ளது. மேலும், கடந்தாண்டு மார்ச் மாதம் பகல் நேரத்தில் 17,196 மொகா வட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18,100 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைகால உச்சபட்ச மின் தேவையான 18,500 மெகாவாட்டினை பூர்த்தி செய்வதற்கு அனல், புனல் மின் நிலையங்கள், மாநில மற்றும் மத்திய தொகுப்புகள், காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள், மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறை யின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் அவர் களிடமிருந்து மின்சாரத்தைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்
சென்னை, மார்ச் 15- தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு ஹெச் 3 என் 2 பாதிப்பு இல்லை என்று அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். சென்னையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் 17 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில் பணியாற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப் படவுள்ளது”என்றார். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம், ஹெச் 3 என் 2 பாதிப்பு உள் ளதா? என சோதனை செய்ய சிறப்பு முகாம்கள் தினந்தோறும் நடைபெறு கிறது. ஹெச்3 என்2 பாதிப்பு பெரிய அளவில் இல்லை. லேசான காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் வந்து ஓரிரு நாட்களில் குணமடைந்து விடுவதால் பிரச்சனை ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடு முறை அளிக்கப்படுமா என்ற கேள் விக்கு,“அதற்கான அவசியம் தற்போது இல்லை. அந்த அளவு தீவிரம் இல்லை. பெரிய பாதிப்பும் இல்லை. தேவை இல்லாமல் பதற்றத்தை நாமே உருவாக்க வேண்டாம்” என அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்
சென்னை,மார்ச் 15- பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்ப வத்தில் உயிரிழந்த டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் குடும்பத்தி னருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: சிவகங்கை மாவட்டம், பள்ளத் தூரில் கடந்த மார்ச் 3 அன்று நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜூனன் (46) என்ப வர் தீக்காயம் அடைந்து, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார். உடனடியாக மூன்று லட்சம் ரூபாயை நிதியுதவியாக அர்ஜூனன் குடும்பத்தினருக்கு வழங்கி, அனைத்து மருத்துவச் செலவு களையும் ஏற்று அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தி யைக் கேட்டு வேதனையுற்றேன். அர்ஜூனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரி வித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள் ளேன். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடப்பதால் ஒலிபெருக்கி பயன்பாட்டை தவிர்க்க அறிவுரை
சென்னை, மார்ச் 15- பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து வருவதால் கோவில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியி ருக்கிறது. சேலம் மாவட்டம், ஜாரி கொண்டாலம்பட்டி கிராமத்திலுள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வு கள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோவில் திருவிழாக்களின் போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப் படுவதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தால் திருவிழாக்களை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜராகி வழக்கறிஞர், தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடந்த 2019 ஆம் ஆண்டேபிறப் பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். விழாக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரி வித்தார். இதை ஏற்று மனுவை தள்ளு படி செய்த நீதிபதிகள், ‘பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூக மான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கி களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’என்று உத்தரவிட்டனர்.
சவாலை சந்திக்குமா பிரான்ஸ் அரசு?
பாரிஸ், மார்ச் 15- பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையான தேசிய அவையில் புதிய ஓய்வூதிய மாற்றங்கள் குறித்த மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. பிரான்சில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 62இல் இருந்து 64 ஆக உயர்த்துவது மற்றும் ஓய்வூதியம் பெறக் குறைந்தபட்சம் 43 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் புதிய மாற்றங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நிபந்தனைகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இருப்பினும், மேலவையான செனட் அவையில் மக்கள் விரோத ஓய்வூதிய மசோதாவுக்கு ஆதரவாக 195 வாக்குகளும், எதிராக 112 வாக்குகளும் விழுந்தன. தற்போது கீழவையான தேசிய அவையின் தேர்வுக்குழு இந்த மசோதா குறித்து பரிசீலனையை மேற்கொண்டிருக்கிறது. அக்குழுவில் ஏழு செனட் உறுப்பினர்களும், ஏழு கீழவை உறுப்பினர்களும் உள்ளனர். இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட வேண்டும் என்று செனட் உறுப்பினர்கள் முயற்சித்து வருகிறார்கள். அத்தகைய சமரசம் ஏற்பட்டால், மாற்றங்களுடன் கூடிய மசோதா மீண்டும் செனட்டில் நிறைவேற வேண்டும். இந்த மசோதா நிறைவேறக்கூடாது என்ற கோரிக்கையுடனான மக்களின் போராட்டம் தொடர்கிறது. நடப்பாண்டில் மட்டும் ஆறு முறை நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வேலையைச் செய்யவில்லை. தொழிற்சங்கங்கள் அழைப்பின்பேரில் மார்ச் 20 ஆம் தேதி வரையில் குப்பைகளை அள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.