விருதுநகர், ஆக.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தாலுகா புலியூரான ஊரா ட்சிக்கு உட்பட்ட கிராமம் பன்னிக் குண்டு. இங்கிருக்கும் கண்மாயை கல்குவாரி நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து, அதன் கரை மற்றும் நீர்வரத்து ஓடையை மூடி அதன் மீது சட்டவிரோத மாகச் சாலை அமைத்துப் பயன்படுத்தி வந்தன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, கல் குவாரிகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சட்டவிரோதமாகப் போடப் பட்ட சாலையில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது. ஆக்கிரமிப்பிற்கு முன் பிருந்த ( 2016-17 ) நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தி ருந்தது. இந்நிலையில், முருகன் என்ற மற் றொரு தனியார் கல்குவாரி நிறுவனம் தொடர்ந்து கனரக வாகனங்களை கண்மாய் கரையில் இயக்கி வருகிறது. எனவே, இதை தடுக்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் கிராம மக்கள் பல கட்டப் போராட் டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 8 அன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது. முடிவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரே நாளில் கனரக வாகனங்கள் கண்மாய் கரை யில் இயக்குவது நிறுத்தப்படும் என உறுதியளித்தார்.
ஆனால், ஆட்சியரின் உறுதி மொழிக்கு மாறாக கனரக வாகனங்கள் இயக்கப்பட்டன. எனவே, புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பன்னிக்குண்டு கண்மாயின் வடக்கு பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைக்குள் வண்டிப் பாதை உள்ளதாகவும் அதை அணுகு சாலையாக பயன்படுத்தி கனரக வாகனங்களை இயக்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கிய தாகவும், அதன்பேரில் அருப்புக் கோட்டை வட்டாட்சியர், அவ்வழியே தனியார் கல்குவாரி நிறுவனம் வாக னங்களை இயக்கலாம் எனவும், வாக னங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி யும், கல்குவாரி தொழிலை முடக்கும் நோக்கில் புலியூரானைச் சேர்ந்த சிலர் வாகனங்களை மறித்து இடையூறு செய் கின்றனர். எனவே. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சுழி துணை காவல் கண்காணிப்பா ளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். எனவே தமிழக அரசானது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவிட்டபடி பன்னிக்குண்டு கண்மாய்க் கரை மற்றும் நீர்வரத்து ஓடையை மூடி அதன் மீது சட்டவிரோதமாகச் சாலை அமைத்துப் பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாவட்ட நிர்வாகமானது, தனி யார் கல்குவாரி நிறுவனத்திற்கு ஆதர வாக செயல்படுவதைக் கைவிட்டு நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தி அப்பகு தியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா மல் அமைதியை நிலைநாட்டிட வேண்டும்.