states

img

அம்பானி, அதானியின் பினாமி ஆட்சி ஒழியும் ‘இந்தியா’ அணி வாகை சூடும்

இந்திய வரலாற்றில் செங்கொடி இயக்கம் செய்திருக்கும் தியா கத்தைப் போல், வேறு எந்த இயக்கமும் செய்ததில்லை. தாக்கு தல்களில் ஏராளமான தோழர் கள் உயிர் தியாகம் செய்துள்ள னர். சோவியத் யூனியன் இருந்தி ருந்தால் உலக வரலாறே மாற்றப்பட்டி ருக்கும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது. இராக், லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடு களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி யிருக்க முடியாது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி கம்யூனிசத்திற்கான இழப்பு அல்ல,  ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுப வர்களுக்கான இழப்பு. 

தீக்கதிரின் பெருமை

விளம்பரம் பெற்றுக் கொண்டு முதலாளி களுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு மத்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தீக்கதிர் செய்தி வெளி யிடுகிறது. காகிதம், மை, அச்சுக்கூலி அனைத்தும் உயர்ந்துள்ள சூழலில், இந்தி யாவில் முதலாளித்துவ பத்திரிகைகள் பல பதிப்புகளை மூடும் வேளையில், தீக்கதிர் 5 ஆவது பதிப்பை திருநெல்வேலியில் துவங்கியுள்ளது.  சமீபத்தில் 3 மாநில தேர்தல் வெற்றி ‘நிச்சயதார்த்தம்’ எனவும் 2024ல் ‘கல்யாண மெனவும்’ பாஜகவினர் கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர். ஆனால், 2024 நாடாளு மன்ற தேர்தல் அவர்களது ஆட்சிக்கு இறுதி சடங்காக அமையும். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியையோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியோ கேள்வி எழுப்பினால் கூட அமைதியாக உள்ள பாஜகவினர், அம்பானி, அதானியை பற்றி கேள்வி எழுப்பி னால் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக் கின்றனர்.இதுவரை ரூ.16 லட்சம் கோடி அளவிற்கு கார்ப்ப ரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்துள் ளனர். ஆனால் விவசாயக் கடன், கல்விக் கடனைதள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். கடன் கட்டவில்லை என்று இரவோடு இரவாக விவசாயி வீட்டை ஜப்தி செய்கின்றனர். இது மோடியின் ஆட்சி அல்ல; அம்பானி மற்றும் அதானியின் பினாமி ஆட்சி.

பத்தில் ஒரு பங்கு கூட இல்லை

சென்னை பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு 5060 கோடி நிதி கேட்டால் ஒன்றிய அரசு வெறும் 450 கோடி மட்டுமே வழங்குகிறது. பத்தில் ஒரு பங்கு கூட தராமல் நெருக்கடியான சூழலை உருவாக்கு கிறது ஒன்றிய அரசு. தமிழக அரசு நெருக்க டியான சூழலில் கூட பாதிக்கப்பட்டவர்க ளுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி வர வேற்கிறது. அது முறையாக அனைவருக்கும் சென்றடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.  3 மாநில தேர்தல் இந்தியா கூட்டணிக்கு  மீண்டும் ஒரு நல்ல படிப்பினையை உரு வாக்கி கருத்து ஒற்றுமையோடு செயல்பட வைத்திருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். 

திருப்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து