சென்னை,ஏப்.9- புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் கே.செல்வராஜ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வரும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், சிஐடியு வின் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றி வந்த தோழர் கே. செல்வராஜ் (வயது 56) உடல்நலக் குறைவால் ஏப்ரல் 8 அன்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்க லையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் கே. செல்வராஜ் அறிவியல் இயக்கப் பணியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அயராது பணியாற்றி யவர். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், கட்சியின் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர், சிஐடியு மாவட்டச் செயலாளர், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உழைக்கும் மக்களின் நலன்க ளுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்திய போராளி. அவரது மனைவி தோழர் சந்திரா அவர்கள் மாதர் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக பணி யாற்றியவர். தோழர் கே. செல்வராஜ் அவர்களின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சிஐடியு சங்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவினால் துயருற்றுள்ள தோழர் சந்திரா மற்றும் அவரது மகள்கள், குடும்பத்தார், கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தோழர்கள் என அனைவருக்கும் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆறுதலையும், அனுதா பத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.