states

அரிசிக்கு ஜிஎஸ்டியா?

சென்னை, ஜூலை 28- அரிசி உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வலி யுறுத்தி ஜூலை 29 (இன்று) தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது ஒன்றிய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டி  வரி விதித்து அமலாக்கி யுள்ளது. இது நாடு முழு வதும் உள்ள ஏழை, எளிய  மக்களின் அன்றாட வாழ்வில் கடுமையான தாக்குதலாக மாறியுள்ளது. உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் மீது மோடி அரசு ஏவியுள்ள இத்தாக்குதலைக் கண்டித்து கட்சியின் மாநிலக்குழு முடி வின் அடிப்படையில் அனை த்து மாவட்டங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகங் கள் முன்பு இந்த ஆர்ப்பாட் டம் நடைபெறுகிறது. விழுப்புரத்தில் நடை பெறும் போராட்டத்தில் கட்சி யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற் கிறார். மத்தியக்குழு உறுப் பினர்கள் பி.சம்பத் மத்திய சென்னையிலும், உ.வாசுகி தென் சென்னையிலும் பங்கேற்கின்றனர்.