states

மூத்த தலைவர் என்.சங்கரய்யா இரங்கல்

அன்புமிக்க தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவு பேரதிர்ச்சியாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது. கட்சியில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட செயலாற்றியவர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களில் கட்சியின் ஸ்தாபன விரிவாக்கத்திற்கு அரும்பணியாற்றியவர். அனைத்து பகுதி தோழர்களையும் அரவணைத்து எளிமையாக பழகக் கூடியவர். ஒரு சிறந்த மார்க்சிய ஆசிரியராகவும் திகழ்ந்தார். இலக்கியத்திலும், இசைத்துறையிலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். எம்.என்.எஸ்.வெங்கட்டராமனை இழந்து வாடும் அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர், தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.