திருவனந்தபுரம், அக்.20- கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சு தானந்தனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனின் வாழ்க்கை நவீன கேரளா வரலாற்றுடன் இணை ந்த பயணமாகும்” என்று முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். “கேரளத்தை இன்றைய முன்னேறிய கேரளமாக மாற்றியதில் வி.எஸ். உள்ளிட்ட தலைவர்களின் பங்கு மறுக்க முடி யாதது” என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுபட்ட கேரளம் உருவாவதற்கு முன்பு, கொடுங்கோன்மை முடியாட்சிக்கும், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அற்புதமான போராட்டங்களை வி.எஸ் நடத்தினார். ஐக்கிய கேரளம் உருவான பிறகு, மக்கள் பிரதிநிதியாக, எதிர்க்கட்சித் தலைவராக, முதல்வராக, மக்கள் போராட்டங் கள் மூலம் அவர் செய்த தலையீடுகள் குறிப்பிடத்தக்கவை. எப்போதும் உழைக்கும் மக்களுடன் இணைந்து சுரண்டலுக்கு எதிராக நின்ற தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன். 1940-இல் தனது 17ஆவது வயதில் ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த வி.எஸ்., பின்னர் சி.பி.எம் கட்சியைக் கட்டியெழுப்பு வதில் முக்கியப் பங்காற்றினார்.
1964-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உரு வாக்கிய 32 உறுப்பினர்களில் ஒருவர் வி.எஸ். சிபிஎம் மாநிலச் செயலாளராகவும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார். குட்டநாட்டில் விவசாயத் தொழிலாளர் களை ஒருங்கிணைப்பதிலும் கயிறு தொழி லாளர்களின் போராட்டங்களுக்கு தலைமை வகிப்பதிலும் அவரது இளமைக்காலத்தையும், திறனையும் பயன்படுத்தினார். புன்னப்புரா வயலார் போராட்ட காலத்திலேயே வி.எஸ். அவர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது என்பதை நாம் அறிவோம். அந்தக் காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கும் விலை மதிப்பற்ற தொடர்பு அவரது வாழ்க்கை. அவரது வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் போராட்டங்களில் தீவிரப் பிடிப்பை வெளிக் காட்டினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களிலும் அவரது போராட்டம் பரவிநின்றது. தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நின்றவர். எனவே, வி.எஸ். அவர்களின் நூற்றாண்டு விழா தொழிலாளர் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள், கம்யூ னிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும் நிகழ்வாகும். தோழர் வி.எஸ் அவர் களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.