states

img

தமிழகம் முழுவதும் மாதர் சங்கம் மனு அளிக்கும் இயக்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் கஸ்தூரி நினைவு தினமான செப்டம்பர் 12 அன்று நுண்நிதி நிறுவனங்களின் அடாவடித்தனங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனு கொடுக்கும் இயக்கங்கள் நடைபெற்றன. இதில் மாநிலத் தலைவர்  எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ.ராதிகா, மத்தியக்குழு உறுப்பினர்கள் ஜி.பிரமிளா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசிகலா உட்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை நகர்ப்புறத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். குடிமனை பட்டா, ரேசன் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்றும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி 6 ஆவது மண்டல ஆணையரிடம்  மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, வடசென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் தேவி, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் விமலா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.