கோவை, அக்.21- தீபாவளி பண்டிகை திங் களன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். வெள் ளியன்று கல்லூரிகள் அனைத்தும் முடிந்த நிலை யில் தீபாவளி பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. இதனால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், தனியாக தங்கி படிக்கும் மாணவர்கள் உட்பட பொது மக்கள் பலரும் சொந்த ஊர் செல்கின்றனர். தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக் கப்படுகின்றன. சொந்த ஊருக்கு பேருந்துகளிலும் ரயில்களிலும் திரும்பி வரு கின்றனர். இதனால் கோவை மாவட்டத்தில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்க ளிலும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் கூட்டம் அதிக ரித்து காணப்பட்டது. காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே மாணவர் கள் பொதுமக்கள் காத்தி ருக்கின்றனர். இந்நிலை யில் அப்பேருந்து நிலையத் திற்கு வந்த சேலம் செல்லும் அரசு பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் நுழை யும் முன்பே மாணவர்கள் பேருந்தை வழிமறைத்த வாறு பேருந்தில் அவர்க ளது உடைமைகளை கொண்டு இடம் பிடித்தனர்.