states

கூட்டணி அமைச்சரவை

ஜூபில்ஜனா, மே 16- ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை பலத்தை சுதந்திரக் கட்சி எட்டாததால் இடதுசாரிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளனர். தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் 41 இடங்களில் சுதந்திரக்கட்சியும், 7 இடங்களில் சமூக ஜனநாயகக் கட்சியும், 5 இடங்களில் இடதுசாரிக்கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன.  இந்தக் கூட்டணி அமைச்சரவைக்கு சுதந்திரக்கட்சியின் தலைவரான ராபர்ட் கொலோப் தலைமை வகித்து பிரதமர் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவார். தற்போதுள்ள வலதுசாரிக் கூட்டணியின் பல்வேறு கொள்கைகளில் மாற்றம் செய்யப் போவதாக புதிய கூட்டணி தெரிவித்துள்ளது. சுதந்திர நீதித்துறை, பொதுச் சுகாதாரம், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த விருக்கிறார்கள்.  புதிய அமைச்சரவை ஜூன் 5 ஆம் தேதியன்று பொறுப்பேற்கவிருக்கிறது.