states

img

ஆர்எஸ்எஸ் பரப்பும் பழமைவாத கருத்துக்களை எதிர்த்துப் போராடுவோம்!

கொல்கத்தா, ஜூன் 1-  ஆர்எஸ்எஸ் பரப்பும் இந்துத் துவா பழமைவாத கருத்துக்களை  எதிர்த்துப் போராட வேண்டும் என்று  சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அகில இந் திய மாநாட்டில் சிஐடியு அகில இந்  திய தலைவர் டாக்டர் கே.ஹேம லதா அறைகூவல் விடுத்தார். சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் 12 ஆவது அகில இந்திய மாநாடு மேற்கு வங்கத்தில் கொல்கத்தா நகரில் பினானி பவனில் மே 21,22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து உழைக்கும் பெண்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.  சிஐடியு அகில இந்திய பொதுச்  செயலாளர் தபன்சென், அகில இந்  திய தலைவர் ஹேமலதா, அமைப்  பாளர் சிந்து ஆகியோர் கலந்து கொண்டனர். தபன்சென்று துவக்கவுரை யில், இந்தியாவில் கையளவு இருக்  கும் முதலாளி வர்க்கம் மிகப் பெரு மளவில் உள்ள தொழிலாளி வர்க்  கத்தினை சுரண்டிக் கொழுத்துக்  கொண்டிருக்கிறது. அதற்கெதிராக தொழிலாளர்கள் அணி திரள்வதை  தடுக்கின்ற சாதி போன்ற அடையா ளங்களை எதிர்த்துப் போரிட வேண்  டும். நம்மை நவீன கொத்தடிமை களாக மாற்றும் நவீன தாராள வாதக் கொள்கைகளையும், பிரி வினைவாத சக்திகளையும் எதிர்த்  துப் போரிட வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம்.

இதனை சவா லாக ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார்.  ஹேமலதா தனது நிறைவுரை யில், அரசின் பல்வேறு திட்டங்க ளில் பணியாற்றும் திட்டப் பணி யாளர்கள் சிஐடியு அமைப்பை வலுப்படுத்த உதவ முடியும்.  குறிப்பாக பாரா டீச்சர்கள், என்சி எல்பியில் பணியாற்றுபவர்கள் என  அனைவரையும் அணி திரட்ட வேண்டும். பழமைவாத கருத்துக் களை பரப்பி வரும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவாவின் கருத்துக்களை  எதிர்த்துப் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.  அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் சிந்து தொகுப்புரை யில், 2023 சர்வதேச மகளிர் தினத்தை உழைக்கும் பெண்களின் பிரத்யேக பிரச்சனைகளை முன்  வைத்து பெருந்திரள் பேரணியாக  நடத்த வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு திட்டமிடல்களை எதிர்காலக் கடமையாக அறிவித் தார்.  தமிழகத்தில் இருந்து கட்டு மானம், தையல், ஆஷா, அங்கன்  வாடி, பொது, இரயில்வே, மின்சா ரம் மற்றும் ஐடி துறைகளைச் சார்ந்த  27 பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். மாநாட்டின் விவாதத்தில் கன்னி யாகுமரி சித்ரா, மின் அரங்கம் சார்  பில் விஜயலட்சுமி, ஐடி அமைப்பு கள் சார்பில் நித்யா ஆகியோர் பங்கெடுத்தனர். உழைக்கும் பெண்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அகில இந்திய நிர்  வாகி மாலதி சிட்டிபாபு, உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில அமைப்பாளர் தனலட்சுமி மற்றும் மாநில நிர்வாகி கள் டெய்சி, செண்பகம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.