states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இன்று பள்ளிகள் செயல்படும்

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண் டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளான சனிக்கிழ மையன்று தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஐடியு-சம்யுக்த கிசான் மோர்ச்சா  கூட்டுப் போராட்டங்களை நடத்தும் 

புதுதில்லி, ஜூலை 14- சிஐடியு மற்றும் சம் யுக்த கிசான் மோர்ச்சா  ஆகிய இரு அமைப்பு களின் கூட்டுக்கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது.  அப்போது மோடி அர சாங்கத்தின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராகப் போராட கூட்டாக இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு போராட்ட நடவடிக்கைக்கும் பரஸ்பரம் ஆதரவும் ஒருமைப்பாடும் தெரிவிப்பதுடன், வர விருக்கும் காலங்களில் கூட்டாகவே போராட்டங் களை மேற்கொள்வது என் றும் தீர்மானிக்கப்பட்டது. புதுதில்லியில் 2023 ஆகஸ்ட்24 அன்று நடை பெறவுள்ள கூட்டு சிறப்பு மாநாட்டில் எதிர்காலக் கூட்டு இயக்கங்கள் அறி விக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.   (ந.நி.)

தமிழ்நாடு ஆளுநருடன் டிஜிபி சந்திப்பு

சென்னை,ஜூலை 14- தமிழகத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக சங்கர் ஜிவால் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு காவல் துறையின் தலை வராக இருக்கும் டிஜிபி சி.சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சைலேந்திரபாபு விடை பெற்றார். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, சங்கர் ஜிவால் சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக சங்கர் ஜிவால் ஆளு நரை சந்தித்து பேசியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு தள்ளிவைப்பு

சென்னை,ஜூலை 14- சிதம்பரம், நடராஜர் கோவிலில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ம் ஆண்டு மே 17 அன்று  தமிழ்நாடு அரசு  பிறப்பித்த  அரசாணையை  எதிர்த்து சென்னை யைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவிலின் கால பூசைகள், அபிஷேகங்கள் கனக சபை யில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடை முறைகள் பாதிக்கப்படும் என அதில் கூறியிருந்தார்.  இந்த வழக்கு தலைமை  நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி  ஆதிகேசவலு அமர்வில் விசார ணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர்கள், தீட்சிதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ள  அரசா ணையை  ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு  நீதிபதிகள்,  தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரான  மனுதாரர் எப்படி வழக்கை தாக்கல் செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பி னர். பின்னர், விசாரணையை அக்டோ பர் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ரேசன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம்,ஜூலை 14- சென்னையிலிருந்து  வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில் காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்பு லிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்த போது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன்  அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.  அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். லாரி ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

உலகச் செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கி றது என்று ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி தெரி வித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ஒட்டு மொத்த ஆப்பிரிக்கக் கண்டமே வாய்ப்புகள் நிறைந்த தாக இருக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமல் நாம் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

வடகொரியாவின் வான்எல்லைக்குள் அமெரிக்க உளவு விமானங்கள் பறந்த தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தங்களது சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதிக்குள் அமெ ரிக்க ராணுவத்தின் உளவு பார்க்கும் விமானங்கள் ஊடுருவின என்று வடகொரிய அரசு கூறி யிருக்கிறது. இத்தகைய ஊடுருவல்கள் தொடர்ந் தால் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி யில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகி றார்கள். குறைந்த ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு ஆகிய இரண்டும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைளில் பிரதானமாக இருக்கிறது. ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.