states

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து இன்று நடைபெறும் போராட்டத்தில் சிஐடியு பங்கேற்பு

சென்னை, ஏப்.3- பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 4 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளும் என்று சிஐடியு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், செயலாளர் சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொரோனா பெருந்தொற்றும். ஊரடங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்டது. தொழில் நிறுவனங்களும். குறு-சிறு-நடுத்த தொழில்களும், முறைசாரா தொழில்களும், விவசாயத்தொழிலும் முடங்கி வேலையும் இல்லை வருமானமும் இல்லை என்ற நிலையில் மக்கள் சொல்லெணா துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.  

முதல் அலை. இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கொரோனா வைரஸ் தொற்று நீடித்து வந்தாலும் பரவல் படிப்படியாக குறைய தொடங்கி  மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி கொண்டு வரும் வேளையில் மத்திய பாஜக அரசு பெட்ரோல்- டீசல் , சமையல் எரிவாயு உருளை விலைகளை தொடர்ந்து கடுமையாக உயர்த்தியும், சுங்க கட்டணத்தை உயர்த்தியும், அதன்  சுமைகளை மக்கள் தலையில் சுமத்தி வருகிறது. குறிப்பாக ஆட்டோ. டாக்சி உள்ளிட்ட  பொது போக்குவரத்தையும், சரக்கு வாகன போக்குவரத்தை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது,

இந்த நிலையில் உத்தரபிரதேசம். பஞ்சாப் உள்ளிட்ட மாநில தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த மோடி அரசு  தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விலைகளை ஏற்றியுள்ளது, கடந்த இரு வாரங்களில்   பெட்ரோல் ரூ.7.56, டீசல் ரூ.7.61 அதிகரித்து முறையே ரூ.108, ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் விளைவாக அத்தியாவாசிய பண்டங்களின் விலைகளும் தாறுமாறாக உயரும் ஆபத்தை உண்டாக்கியுள்ளது. மத்திய பாஜக அரசு  எண்ணெய் விலைகளின் மூலம் மக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கங்களின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனால்  மறைமுகமாக அனைத்துவிதமான பொருட்களின்  விலைகளும் உயர்வும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீட்டு உபயோகம் மற்றும் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளும் பாஜக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.

இதனால் குடும்பங்களில் செலவினங்கள் கூடுதலாகியுள்ளது மட்டுமல்ல. தெரு கடை முதல் உயர்தர உணவுகங்களில் உணவு பண்டங்களில் விலைகளும் உயரக்கூடிய நிலைமை ஏற்பட்டு உணவுத்தொழில் கடுமையாக பாதிக்கும் நிலையையைம் உருவாக்கியுள்ளது. அனைத்து பிரிவு மக்களின் அடிப்படை தேவைகளான எரிபொருள் எண்ணெய்கள், சமையல் எரிவாயு உருளை விலைகளை உயர்த்தியும் சுங்க சாவடிக்கட்டணத்தை உயர்த்தியும் என   அடுக்கடுக்கான சுமைகளை மக்கள் தலையில் சுமத்தும் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு இணைப்பு சங்கங்கள் அனைத்தும் பங்கேற்க வேண்டுமென சிஐடியு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.