புதுதில்லி, ஜூலை 30- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் தொழிலாளி விரோத, விவசாயிகள் விரோத, விவசாயத் தொழி லாளி விரோத, அனைத்து மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கூட்டுப் பிரச்சாரம் மற்றும் கூட்டு இயக்கங்களை நடத்திட, இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் ஆகியவை தீர்மானித்துள்ளன. இது தொடர்பாக சிஐடியுவின் பொதுச் செயலாளர் தபன்சென், அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதி ராக சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சக் கணக்கில் உழைக்கும் மக்கள், தொழிலா ளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் மற்றும் பல்வேறு பிரிவினர் ஈடு பட்டு அவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திர தினத்தை, மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் மிகவும் படா டோபமாகப் பிரச்சாரம் செய்தபோதிலும், நடைமுறையில் மக்களுக்கு எதிரான கொள்கைகளை அரக்கத்தனமான முறை யில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்திய நாசகரக் கொள்கை
தற்போதைய மோடியின் ஆட்சியின் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் நிலைமைகளும் தொடர்ந்து சீரழிந்துகொண்டு வருகின்றன. கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் அதி லிருந்து மக்களின் சுகாதாரம், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்று வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது மேலும் சுமைகளை ஏற்ற இந்த அரசு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அளிப்பதற்குப் பதிலாக, பொதுப் பணத்திலிருந்து அந்நிய ஏகபோக கார்ப்ப ரேட் நிறுவனங்கள் உட்பட பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு ‘ஊக்கம் அளிக்கி றோம்’ என்ற பெயரில் சலுகைகளை அளித்து அவை மேலும் பெரிய அளவில் செல்வத்தைப் பெருக்கிட வசதி செய்து கொடுத்தது. இவர்களின் கொள்கைகள் சமூகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி இருக்கின்றன. வேளாண் இடுபொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன. விவ சாயம் செய்வது என்பதே விவசாயி களுக்கு, அதிலும் குறிப்பாக ஏழை விவ சாயிகளுக்கு, சாத்தியமற்ற ஒன்றாக மாறி யிருக்கிறது. கிராமப்புறங்களில் வேலை நாட்களும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவோம் என்று உறுதிமொழி அளித்த மோடி அரசாங்கத்தைக் கேலி செய்யும் விதத்தில், வேளாண்மை வருமானம் முன் பிருந்ததைக் காட்டிலும் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
வேலையிழந்து கோடிக்கணக்கானோர் வீதியில்
மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலைக்கு வரவிரும்பும் தொழிலா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே சமயத்தில், அரசாங்கமோ அத்திட்டத் தின் கீழான ஒதுக்கீடுகளைக் குறைத்தி ருக்கிறது. வேலை செய்த தொழிலாளர் களுக்குத் தரவேண்டிய ஊதியப் பாக்கி அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. வேலையின்மை மிகவும் ஆபத்தான நிலைக்கு அதிகரித்திருக்கிறது. லட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகள் மூடப்பட்டு அதன் விளைவாக கோடிக்கணக்கானவர்கள் வேலையிலிருந்து வீதிக்கு அனுப்பப்பட்டி ருக்கின்றனர். மோடி அரசாங்கம் தனி யாருக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியுள்ளபோதிலும், அவை வேலை வாய்ப்பைப் பெருக்கிடும் விதத்தில் எதனை யும் செய்திட வில்லை.
மோடி அரசாங்கம், வீரஞ்செறிந்த விவசாயி கள் போராட்டத்திற்குப் பணிந்து விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்கள் மூன்றையும் விலக்கிக்கொண்டபோதிலும், அப்போது விவசாயிகளுக்கு அளித்திட்ட உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்ற, துல்லியமான நட வடிக்கை எதையும் இதுவரை எடுத்திட வில்லை. அனைத்து வேளாண் பயிர்களுக்கும் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் இதர பிரச்சனைகள் தொடர்பாகவும் அளித்திட்ட எந்த உறுதிமொழியையும் நிறைவேற்ற முன்வர வில்லை. இதற்கு மாறாக, மின்வாரியங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் விதத்தில் மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவை அறி முகப்படுத்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டங்க ளாக மாற்றியதையும் அமல்படுத்திடத் திட்டங்க ளைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. இப்போது, தங்களின் புதிய அவதாரமான தேசிய சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தின் (National Asset Monetisation Pipeline) கீழ், தேசிய நிலங்களைப் பணமாக்கும் கழகத்தின் (National Land Monetisation Corporation) மூலம் நாட்டின் சொத்துக்களைத் தனியாரிடம் தாரைவார்க்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அரசமைப்புச்சட்டத்தை வீழ்த்தும் செயல்
மோடி அரசாங்கம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருக்கிறது, தங்கள் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்க ளையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுக் கப்பட்டிருக்கிறது. இதழாளர்கள், அறிவுஜீவி கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள் என அனைத்துத்தரப்பினரும் துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர் மற்றும் சிறையில் அடைக்கப்படுகின்றனர், அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. கவித்துவத்துடன் கூறுவதெனில் கருத்துவேறுபாடு என்பது ‘புல்டோசர்கொண்டு’ தகர்க்கப்படுகிறது. தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை யினர் மற்றும் பெண்கள் முதலானவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும் பான்மை மதவெறி சக்திகள் மக்களின் உடை, உணவு, திருமணத் தேர்வு முதலானவற்றிலும் மூக்கை நுழைக்கின்றன. இது, சிறுபான்மை யினத்தவர் மத்தியிலும் அடிப்படைவாத சக்தி கள் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இரு மதங்களிலும் உள்ள மதவெறி சக்திகளும் மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களின் மீதும், அவர்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன, இந்தப் பின்னணியில்தான் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படும் மோடி அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மதவெறி பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிராகவும் ஒரு வலுவான எதிர்ப்பு இயக்கத்தை நாடு தழுவிய அளவில் மேற்கொள்வதற்கான பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளைத் தீர்மானித்தி ருக்கின்றன.
மக்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம்
இக்கூட்டுப்பிரச்சாரம் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அனைவ ருக்கும் சுகாதாரம், வீட்டுவசதி, இலவசக் கல்வி, குறைந்தபட்ச ஊதியம், குறைந்தபட்ச ஆதார விலை உட்பட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பிரதான பொதுக் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தும். இவற்றின் அடிப்படையில் தேசிய பணமாக்கும் திட்டம் (National Monetisation Pipeline) உட்பட தனியார்மயத்தை நிறுத்தக் கோரும். அர சாங்கம் வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தும். சிறிய விவசாயிகளுக் கான கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரும். தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தும். மதவெறி சக்திக ளின் பிளவுவாத நடவடிக்கைகளை முறிய டித்திட அனைத்துப்பிரிவு மக்களின் ஒற்று மையையும் உயர்த்திப்பிடித்திட பிரச்சாரம் அறைகூவல் விடுக்கும்.
ஆக.1 கூட்டியக்கம்
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு வும் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் 2022 ஆகஸ்ட் 1 அன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் நிலம், மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஊதியம் மற்றும் வேலை நாடு முழுவதும் நடத்தவுள்ள கூட்டி யக்கத்திற்கு ஒருமைப்பாட்டை விரிவாக்கிட வும் தீர்மானித்திருக்கிறது. மேற்படி கோரிக்கைகள் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் விரிவான அளவில் சென்றடையக்கூடிய விதத்தில், 2022 ஆகஸ்ட் 1இலிருந்து இரு வார காலத்திற்கு கூட்டாக இயக்கம் நடத்திடவும் தீர்மானித்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக்காலத்தில் அதில் ஈடுபட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் பிரிவினரின் பங்களிப்புகள் குறித்து விரிவான அளவில் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும் அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கமும் இந்துத்துவாவாதிகளும் பிரிட்டிஷ் காலனியாட்சிக்கு வெண்சாமரம் வீசியதும், சுதந்திரப்போராட்டத்திற்கு எதிரான அடிமை மனப்பான்மையுடன் செயல்பட்டதையும் விளக்கிக் கூறப்படும். இப்பிரச்சாரங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 14 அன்று நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் பெரும் திரளாக மக்களை அணிதிரட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நாட்டின் சுதந்திரப் போராட்டத் தின் 75ஆவது ஆண்டின் தேசியக்கொடியை ஏற்றி நிறைவடையும்.
ஆக.22 -இல் மக்கள் இயக்கம்
இம்மூன்று இயக்கங்களும் மக்களைப் பெருந்திரளாக அணிதிரட்டி, ஆகஸ்ட் 22 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் கொண்டாடும். இதனைத் தொடர்ந்து சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் தலைநகர் தில்லியில் உள்ள தல்கடோரா ஸ்டேடியத்தில் செப்டம்பர் 5 அன்று தேசிய சிறப்பு மாநாட்டை நடத்தி, எதிர்காலப் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைத் திட்டங்களைத் தீர்மானித்திடும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழில்: ச.வீரமணி