states

அபுதாபியின் மாரத்தான் போட்டிக்கு அனுமதி வழங்கவில்லை கேரளத்துடன் ஒத்துழைக்க எந்த நாட்டையும் அனுமதிக்காத ஒன்றிய பாஜக அரசு

கேரளத்தின் மீது அனுதாபம் காட்டும் நாடுகளுடன் ஒத்துழைக்க ஒன்றிய அரசு அனுமதிப்பதில்லை. கேரளத்துடன் பல நாடுகள்  இதயபூர்வ உறவு வைத்திருக்கின்றன. அவற்றுடன் ஒத்துழைக்க வும் அனுமதி இல்லை. இங்கு நல்லது எதுவும் நடக்கக்கூடாது என்பதே ஒன்றிய அரசின் அணுகுமுறை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாகச் சாடியுள்ளார். கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) குடும்பக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் பேசியதாவது: அபுதாபி  மாரத்தான் போட்டியை கேரளாவில் நடத்த விருப்பம் தெரிவித்தனர். உலகப் போட்டி என்பதால், ஒன்றியத்தின் அனுமதி கோரப்பட்டது. இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எதற்காக கேரளா செல்கிறீர்கள் என்றும்  கேட்டுள்ளனர். ஒன்றிய அரசு ஆர்வமாக உள்ள மற்றொரு மாநிலத்தின் பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இப்படிப்பட்ட விசயங்களில் கூட இப்படி இருந்தால் என்ன நடக்கும்?  கேரளாவில் பாஜக வளராமல் இருப்பதற்கு எல்.டி.எப்-இன் செல்வாக்கு தான் காரணம். அந்தச் செல்வாக்கை உடைக்க பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் வழி தேடுகின்றன. கேரள அரசை அவமதிக்கும் பிரச்சாரங்கள் ஒரு உதா ரணம். ஒன்றிய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த நவகேரள கண்ணோட்டம் (சதஸ்)  நிகழ்ச்சிகள் ஏற்பாடு  செய்யப்பட்டது. அதனை புறக்கணிப்பதாக யு.டி.எப் அறிவித்திருப்பது மக்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இவ்வாறு அவர் கூறினார்.