சென்னை, ஆக. 13- நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டி வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறி விக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தில்லி உட்பட, இந்தியாவின் அனை த்து மாநிலங்களிலும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. சுதந்திர தினத்தின் போது தில்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்து வார். அதேபோல், அந்தந்த மாநிலங்க ளில், அம்மாநில முதலமைச்சர்கள் தேசிய கோடி ஏற்றி அம்மாநில மக்க ளிடையே உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து உரை நிக ழ்த்துவார். முன்னதாக தமிழ்நாடு காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். இதற்கான முன்னேற் பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வித மாக விருதுகள் வழங்கி கவுர விக்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் காவல் விருது 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 2023 சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந் நிகழ்வையொட்டி போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்ட விரோத செயல்பாடுகளை ஒடுக்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண் காணிப்பாளர் எம்.குணசேகரன், நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர் ஸ்.முருகன், நாமக்கல் மாவட்ட கிரேடு 1 பிசி 1380 ஆர்.குமார் ஆகிய 6 காவலர்களுக்கு முதல மைச்சர் காவல் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சுதந்திர தின விழா நடைபெறும் நாளன்று சென்னையில் நடைபெறும் விழா வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப அனைவரை யும் பணியில் இருந்து தற்காலிக மாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விழா விற்கான நோடல் அதிகாரியாக ஏ.டி.சக்கரவர்த்தி நியமிக்கப்பட் டிருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.