சென்னை, மே 4- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் திங்களன்று(மே 4) இந்து சமய அறநிலையத்துறை மற் றும் தகவல் தொழில்நுட்ப வியல் ஆகிய துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறு வதற்கு ஏதுவாக, ஒன்றிய உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் அலுவலகத்திலி ருந்து செய்தி வரப்பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முத லமைச்சர், “நாம் அனைவரும் இணைந்து இந்த ஒருமனதாக நிறைவேற்றிய சட்டமுன்வடி வை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரினோம். அது குறித்து அனைத்துச் சட்ட மன்றக் கட்சிக் கூட்டத்திலும் விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடி யரசுத் தலைவரின் ஒப்புத லைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம். தொடர் முயற்சிகளின் பய னாக, ஒரு வரலாற்று நிகழ் வாக, சட்டமன்றத்தில் மீண் டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன் வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறு வதற்கு ஏதுவாக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற தகவலை செயலர் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலி யுறுத்தி, இந்தச் சட்டமுன்வடி விற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.