மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்
சென்னை, அக்.28- மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நட வடிக்கை எடுக்கக்கோரி ஒன் றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கட லோரக் காவல் படையின ரால் அக்.23-ஆம் தேதி தினாது தீவு அருகே கைது செய் யப்பட்டுள்ளனர். உரிய தூத ரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர் களது மீன்பிடிப் படகுகளை யும் விரைவில் விடுவிக்க வேண்டுமென முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பசும்பொன்னில் 2 மணி மண்டபம்
சென்னை, அக்.28- இராமநாதபுரம் மாவட் டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவருக்கு இரண்டு மணிமண்டபம் கட் டப்படும் என்று தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார். இராமநாதபுரம் மாவட் டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப் பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1.42 கோடியில் ஒரு மண்டபமும், மிக முக் கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12.54 லட்சத்தில் மற்றொரு மண்டபமும் தமிழ்நாடு அர சால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேக்கிபட்டி குவாரி ஏலம் ஒத்தி வைப்பு
மதுரை, அக்.28- மதுரை மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் நவம் பர் 30 அன்று நடைபெற விருந்த கிரானைட் குவாரி கள் ஏலம் ஒத்திவைக்கப்பட் டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள சேக்கிபட்டி, திருச்சுனை, அய்யாப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களிலும் நவம்.30 அன்று கிரானைட் குவாரிகள் ஏலம் விடப்படுவதாக அறி விக்கப்பட்டிருந்தது. மூன்று கிராம மக்களும் குவாரி ஏலம் விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் நலன் கருதி ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியது. சிபிஐ மாநி லச் செயலாளரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி யிருந்தார். இந்த நிலையில் குவாரிகள் ஏலம் விடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் நீர்மட்டம் 51.16 அடியானது
சேலம், அக்.28- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்த மழையின் கார ணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகி றது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 51.16 அடியாக இருந்தது.
ஆளுநர் தனது வேலையை செய்வதில்லை: கி.வீரமணி
வேலூர், அக்.28- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தின் உள் நோக்கம் குறித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திராவிட கழகம் சார்பில் விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தலைவர் வீரமணி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டம் என்பது முற்றி லும் சாதி அடிப்படையில் திட்டமாகும். இந்த காலத்திலும் மக்களை வேறுபாடு செய்ய அவர்கள் முயற்சிக்கின் றனர்”என்றார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள் அதற்கு என்னுடைய விளக்கம் என்பது, இதுதான் நமக்கு இறுதி தேர்தல் என்று பாஜக நினைத் துள்ளது மற்றும் நாம் அவர்களுக்கு இறுதி தேர்தல் இதனை முடித்து விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த கி.வீரமணி, “தமிழ் நாடு ஆளுநர் மாளிகை வெளியில் நடந்திருப்பது காவல்துறையே முழு விவரத்தை தெரிவித்துள்ளது. எதை யாவது சொல்லி தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் தேடித்தர சிலர் முயற்சிக் கின்றனர். எந்த வேலை ஆளுநர் செய்ய வேண்டுமோ அதை அவர் செய்வ தில்லை. எந்த வேலை பார்க்கக் கூடாதோ அதைத்தான் அவர் பார்க்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து சென்னையில் பேரணி
சென்னை, அக். 28 - இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை நிறுத்த வேண்டும், பாலஸ்தீனம் பால ஸ்தீனியருக்கே என வலியுறுத்தி நவ.3 அன்று சென்னையில் பேரணி நடை பெறுகிறது. அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுமக்கள் அமைப்பு களின் கூட்டம் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை யில் நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில், நவ.3 அன்று பழைய சித்ரா திரையரங்கம் அருகில் தொடங்கி தாளமுத்து, நட ராஜன் மாளிகை வரை பேரணி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு ள்ளது. இதனையொட்டி துண்டு பிரசுர பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா? அரசு தகவல்
சென்னை, அக்.28- வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்பட்டு, விதிகளை பின் பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தாமல் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. வாக்காளர் பட்டியலில் குறைகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் தற்போது தேர்தல் நடத்த முனைப்பு வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாகவும், வெளி ப்படையாகவும் நடத்த அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரு கின்றன என அரசு தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை,அக்.28- தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரி களை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதில், சென்னை ரயில்வே காவல் எஸ்.பி.யாக சுகுணா சிங் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்ட ண்ட் பாஸ்கரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கவுதம் கோயல் ஐபிஎஸ் பணிட மாற்றம் செய்யப்பட் ப்பட்டுள்ளார்.
தங்கம் விலை ரூ.520 உயர்வு
சென்னை,அக்.28- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையன்று (அக்.28)ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.5,770-க்கு விற்பனை யானது.வெள்ளியின் விலை மாற்ற மின்றி ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
விமானத்தில் இனிப்பு வகைகளை எடுத்துச் செல்ல தடை
சென்னை,அக்.28- சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு களுக்கு பண்டிகை கால இனிப்பு வகைகளை கொண்டு செல்ல விமான நிலைய சுங்கத்துறை தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி திருப்பதி லட்டு போன்ற கோயில் பிரசாதங்களுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற் கொள்வோர் இடையே இது அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த வாரம் சென்னையில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்படு வதற்கு சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்குள் பயணிகள் நால்வர் சென்றனர். அவர்களது பயணம் பெட்டி களில் இனிப்பு பலகாரங்கள் இருந்தது. அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என சுங்கத்துறையினர் திட்டவட்டமாகக் கூறி விட்டதாக சன் நியூஸ் உள்ளிட்ட இந்திய ஊடகங்கள் தெரி வித்தன. இதனால் சென்னை-பேங்காக் பயணத்தை ரத்து செய்து விட்டு மும்பையில் இருந்து அதே இனிப்பு வகைகளுடன் அந்த நால்வரும் பேங்காக் சென்றனர். பின்னர் சென்னை திரும்பிய அவர்கள், “இனிப்புப் பல காரங்களை எடுத்துச் செல்ல நீங்கள் தடை விதித்தீர்கள். ஆனால் மும்பை விமான நிலையத்தில் எப்படி அனுமதி த்தார்கள்? இந்தியா முழுவதும் ஒரே சட்டம் தான்?” என்று சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, இலங்கைக்குச் செல்லும் பயணிகள் லுங்கி, காட்டன் புடவைகள், நைட்டி, வேட்டிகள் எடுத்துச் செல்லவும் சுங்கத்துறையினர் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி மற்றும் பெங்களூரில் இருந்து பயணிகள் இலங்கைக்கு இவற்றைக் கொண்டு செல்கின்றனர்.