சென்னை,ஏப்.22- தமிழ்நாட்டில் நவம்பர் 1 அன்று உள்ளாட்சிகள் தினமாக மீண்டும் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளி யன்று (ஏப். 22) கேள்வி நேரத்திற்கு பிறகு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொடர்பாக, விதி 110-ன்கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அப்போது, உள்ளாட்சி என்பது மக்களாட்சி ஜனநாயகத்தின் ஆணிவேர். அது வலிவுடனும் பொலிவுடனும் இருந்தால்தான், அரசின் நலத் திட்டங்கள் கடைக் கோடி மனிதரையும் சென்றடை யும்” என்றார். “உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொடர்பு இயக்கங்கள் நடத்திட ஏது வாக, ஆண்டுதோறும் ஒரு குறிப் பிட்ட தினத்தை ‘உள்ளாட்சிகள் தினம்’ எனக் கொண்டாட வேண்டு மென்று நான் துணை முதலமைச்ச ராக இருந்தபோது முடிவு மேற் கொள்ளப்பட்டது. அன்படி 2007 நவம்பர் 1 ஆம் தேதி ‘உள்ளாட்சி தினமாகக்’ கொண்டாடப்பட்டது. இறுதியாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடப் பட்டது. அதற்குப் பிறகு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடை யில் நடத்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி, “உள்ளாட்சிகள் தினமாக” கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
6 முறை கிராம சபை கூடும்!
ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கி, கிராம சபை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம சபைக்கு என குறிப்பிட்ட அதி காரங்களும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டில் முதல் ஆண்டிற்கு 4 முறை, குறிப்பிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப் பட்டு வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் தேவையின் அடிப்படையில் மிகக் குறுகிய கால அறிவிப்புகள்மூலம் நடத்தப் பட்டு வருகின்றன. இதில் மக்க ளின் பங்கேற்பு குறைவாக இருக் கிறது என்பது அரசின் கவ னத்திற்கு வந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு முதல் ஜனவரி 26-குடியரசு தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தியடிகள் பிறந்த தினம் மற்றும் மார்ச்-22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்-1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித் தார்.