states

பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

அண்ணாநகர், ஜூன் 21- பூக்களின் வரத்து அதி கரிப்பு காரணமாக சென்னை கோயம் பேடு  மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஓசூர், சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பூக்கள் வரு கின்றன. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு மல்லி 500 க்கும் கனகாம்பரம் 500க்கும் ஜாதிமல்லி 300 க்கும் விற்பனை யானது. சாமந்தி 160க்கும் அரளி பூ 160க்கும் பன்னீர் ரோஸ் 40க்கும் சாக்லேட் ரோஸ் 50க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலொ மல்லி பூ 210க்கும் கனகாம்பரம் 200க்கும் அரளி பூ 30க்கும் பன்னீர் ரோஸ் 10க்கும் சாக்லேட் ரோஸ் 10க்கும் சமங்கி 30க்கும் சாமந்தி 50க்கும் விற்பனை செய்யப்  படுகிறது. தற்போது வரத்து அதி கரிப்பால் பூக்களின் விலை  சரிந்துள்ளது. ஆடி மாதம் பிறந்ததும் மீண்டும் பூக்க ளின் விலை உயரும் என்று கூறப்  படுகிறது.