புதுச்சேரி மக்களை ஏமாற்றும் பாஜக
புதுச்சேரியில் குடும்பத் தலைவி களுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. ஒரே ஒரு மாதம் 10 ஆயிரம் பேருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்திருக்கி றது. அதன்பிறகு 73 ஆயிரம் பேரின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இது வரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. 75 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டு வரு வதாக துணைநிலை ஆளுநர் சொல்லு கிறார். அது உண்மைக்கு புறம்பானது. இதுவரை ஒரு பைசாகூட அவர்களின் வங்கி கணக்கில் சேரவில்லை. பாஜக வினர் பொய் சொல்வதில் கலைத் தேர்ந்த வர்கள் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அடுத்து “சமுத்ராயன்”
“சந்திரயான் - 3”, “ஆதித்யா எல்-1” வெற்றியை தொடர்ந்து கடல் வளங்களை ஆய்வு செய்வதற் காக சமுத்ராயன் திட்டம் தயாராக உள்ள நிலையில், ஆய்வுக்காக “மத்ஸ்யா 6000” நீர்மூழ்கி கலன் உருவாக்கும் பணி ஏறக் குறைய நிறைவடைந்துவிட்டது. சென் னையில் உள்ள தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட் டுள்ள இந்த “மத்ஸ்யா 6000” நீர்மூழ்கி கலன் மூலம் ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற் காக, 6 கிமீ கடல் ஆழத்திற்கு 3 மனி தர்களை இந்த நீர்மூழ்கி வாகனத்தில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
“இந்தியா” கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து?
பாஜக ஆட்சியை துரத்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் என 28 எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து “இந்தியா” என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி யுள்ளது. பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆலோ சனை கூட்டத்திற்கு பிறகு, பல்வேறு பிரச்ச னைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக் கப்பட்டது. இந்நிலையில், “இந்தியா” கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்தி யப்பிரதேச மாநில தலைநகர் போபா லில் அக்டோபர் 2 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படும் என மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவரு மான கமல்நாத் அறிவித்துள்ளார். பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான கார ணம் குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுரங்காபாத், உஸ்மானாபாத் பெயர்கள் மாற்றம்
எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வங்கியும், சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மக்க ளின் நலனுக்காக எதையும் செய்யாத பாஜக கூட்டணி அரசு அதானிக்கு குத் தகை விடுவதற்கும், முகலாய மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்ட பெயர்களை மாற்றுவதே குறிக்கோளாக கொண்டு வேலை செய்து வருகிறது. இந்நிலை யில், அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜி நகர், தாரா ஷிவ் என மாற்றுவதற்கான அறிவிக்கை யை வெளியிட்டுள்ளது. அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய நக ரங்களின் பெயர்களை மாற்றும் முடிவு முந்தைய மகா விகாஸ் அகாதி அரசால் எடுக்கப்பட்டது என்றாலும், அப்போ தைய காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்த நகரங்களின் பெயரினை மாற்றும் முடிவு சட்டவிரோதமானது” எனக் கூறியது. ஆனால் தற்பொழுது தானாகவே பெயரை மாற்றியுள்ளது.
சீமான் பேச்சு தரம் தாழ்ந்தது: ம.ம.க. கண்டனம்!
நேர்காணல் ஒன்றில் ஊடகவியலாளர் முக்தாரின் குடும்பப் பெண்கள் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். “எல்லோரையும் கேள்விகளுக்கு உட்படுத்தும் ஊடகவியலாளர் முக்தார், சீமான் குறித்தும் கேள்விகளை எழுப்புவது, அவரது பணியின் ஒரு பகுதி. அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல், முக்தாரின் குடும்பப் பெண்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக சீமான் பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் பேச்சு, அவரது தரம் தாழ்ந்த மனநிலை யை வெளிப்படுத்தி உள்ளது. சீமான், பெண்களின் கண்ணியத்தை மதிப்பவர் அல்ல என்பதும் வெளிப்பட்டுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் இந்த வெறுப்பு பேச்சு காட்டுகிறது” என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்ட பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை,செப்.16- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணியாற்றியவர்க ளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறி வதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன். இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வரு வாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வ லர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர் கள், நியாய விலைக் கடைப் பணி யாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவன பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலு வலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்! களப்பணியாளர்களை வழி நடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலா ளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,செப்.16- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒரு சில இடங்களில் ஞாயிறன்று (செப்.16) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடு துறை, திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.18 முதல் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மித மான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடுவழியில் பழுதாகி நின்ற வெடிமருந்து லாரி
சென்னை, செப்.16- ஆஸ்திரேலியாவிற்கு வெடி மருந்துகள் கொண்டு செல்வதற்காக சென்னை துறை முகத்துக்கு 19 லாரி களில் வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டன. திருவொற்றியூர் விரைவு சாலை வழியாக இந்த லாரிகள் வெள்ளி யன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒரு லாரி பழுதாகி எண்ணூர் விரைவு சாலை டோல்கேட் அருகே நின்றது. உடனடியாக போக்கு வரத்து போலீசார் பழுது ஏற்பட்ட லாரியை சரி செய்ய மெக்கானிக்கை வரவழைத்தனர். பின்னர் பழுது பார்க்கப்பட்டவுடன் மணலியில் உள்ள பால்மர் லாரி கண்டெய்னர் முனை யத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனைக்கு பின்னர் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே வெடி மருந்துடன் லாரி நின்றதால் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழுமோ என்று பொது மக்கள் அச்சப்பட்டனர்.
தீக்கதிர் முக்கிய செய்திகள்
தடை செய்யப்பட்ட விநாயகர் சிலை களை, உடனடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதி மொழி வாங்கி விட்டு சிலைகளை விற்க லாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.'
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூர் சோகண்டியில் போலீ சாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கிளாய் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஸ்வா வை போலீஸ் என்கவுன்ட்டர் செய்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பார முல்லா அருகே உரி பகுதியில் சனிக்கிழமையன்று 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்திய எல்லையில் ஊடுருவ முயன்றபோது, அவர்கள் மீது துப்பாக் கிச்சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த விவ காரத்தில் ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீ சார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15), 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு தலைமுடியை வளர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தீண்டாமை கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ, மாணவிகளை கல்லூரிகள் ஊக்குவிக்க வேண்டும் என சனாதனம் எதிர்ப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பலவற்றை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசு, தற் போது முத்திரை பதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றியுள் ளதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற் கின்றது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.