திருநெல்வேலி, ஏப்.1- நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.1, 2 ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நா் பா.செந்தாமரை கண்ணன் வியாழக்கிழமை கூறியது: மன்னார் வளைகுடா, உள்தமிழகப் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரண மாக, மேற்குதொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்.1, 2 ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.3, 4: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 3, 4 ஆகிய இரண்டு நாள்க ளுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். . தமிழ கத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் கிண்ணக்கோரையில் 40 மி.மீ., ஈரோடு மாவட்டம் தாளவாடி, நீலகிரி மாவட்டம் கேட்டி, கோயம் புத்தூா் மாவட்டம் சோலையாறில் தலா 20 மி.மீ., தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 10 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது.