சென்னை, மே 29- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதி களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக குறிப்பி ட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
திங்கட்கிழமை லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி களில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட நாட்க ளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வானிலை தொடர்பான விவரங்களை imdchennai.gov.in இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.