பெங்களுரூ, ஆக. 17 - காவிரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ள நிலையில், கூட் டணிக் கட்சியான திமுக-வை திருப்திப்படுத்தவே இவ்வாறு தண்ணீர் திறந்துவிடப்படுவதாக பாஜக தலைவரும் முன்னாள் முதல் வருமான பசவராஜ் பொம்மை கொதித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்து விடுவதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். முன்னதாக, கர்நாடகாவின் தேவைகளை மனத்தில் வைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடு வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தமிழ்நா ட்டிற்கு 10 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். “தற்போதும்கூட தண்ணீர் பற்றா க்குறை இருக்கும் நிலையிலும், நாங்கள் 10 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட இருக்கிறோம். எங்களு டைய முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன” என்று சிவகுமார் கூறினார். இந்நிலையில் ஆத்திர மடைந்துள்ள பாஜக தலைவர் பச வராஜ் பொம்மை, கர்நாடக காங் கிரஸ் அரசு மீது பாய்ந்துள்ளார்.