காவிரி டெல்டா பகுதி யில் குறுவை சாகு படியை காப்பாற்ற காவிரியில் 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது. இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால், உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இதையடுத்து காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக்கூட்டம் நடைபெற்றது. இதன் அறிக்கை யை உச்சநீதிமன்றத்தில் வியா ழனன்று காவிரி மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்தது. அதில், ஆகஸ்ட் 12 முதல் 26 ஆம் தேதி வரை 1.49 லட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப் பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரையும் கணக் கில் எடுக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகள் சராசரியுடன் ஒப்பிட்டு, நீர் பற்றாக்குறையின் போது எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தின மும் 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.