அமெரிக்காவில் ஏறக்குறைய பத்து இலட்சம் ஏக்கர் பூமி மனிதர்களின் சவ அடக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் பெரும் பகுதி குழி தோண்டி புதைத்தல் போன்ற நிலத்தின் மறு பயன்பாட் டிற்கு சாத்தியமற்றதாக பூமியை மாற்றும் நடை முறைகளே. இதனால் பெரும் பரப்பில் உள்ள நிலம் அவற்றின் இயல்பான தன்மையை இழக்கிறது. மண்ணில் வாழும் உயிரினங்களின் சூழல் மண்டலத்தை அழித்தே சவ சடங்குகள் நடக்கின்றன. புராதனகாலத்தை திரும்பிப் பார்த்தால் இயற்கை யுடன் இணைந்த ஆனால் இயற்கையை அதிகம் சேதப் படுத்தாத சவ அடக்கத்திற்குரிய பண்பாடே நிலைநின்றி ருந்தது. உலகின் மக்கதொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் இக்காலத்தில் சூழலிற்கு நட்புடைய சவ அடக்க முறைகளையே மனித சமுதாயம் பின்பற்றவேண்டியிருக்கும். மின் மயானம் போன்ற தொழில்நுட்பங்கள் பரவலாக்கப்படவேண்டும். திபெத் மற்றும் மங்கோலியாவில் புத்த மத நம்பிக்கை உடையவர்களுக்கு இடையில் ஆகாயத்தில் சவ அடக்கம் (sky burriyal) என்ற முறையே பின்பற்றப்படுகிறது. மரணம் நடந்த ஆளின் உடல் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தூரத்தில் மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்படும். அங்கு சடங்குகள் செய்யப்படும். பிறகு இதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட தனியிடத்தில் இறந்த உடல் வைக்கப்படும். சில சமயங்களில் இந்த இடம் ஒரு மயானம் போல கட்டப்பட்ட இடமாகவும் இருக்கும். இதன் பின்னர் ஆட்கள் இந்த இடத்தை விட்டு சென்று விடுவார்கள்.
புத்தமத நம்பிக்கையின்படி இவ்வாறு இறந்த உடலை மலை மேல் வைப்பதால் இறந்தவருக்கு நேரடி யாக சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. உடல் வைக்கப்பட்டவுடன் இந்த பிரதேசத்தில் இருந்து எழும்பும் வகையில் சூ என்று கூவி அழைத்து புகையைக் கிளப்புவர். இதன் பின் கழுகுகள் இங்கு பறந்துவந்து தொடர்ந்துள்ள நாட்களில் இந்த உடலை உணவாக உட்கொள்ளும். இயற்கை கொடுத்தது இயற்கைக்கே இதன் மூலம் இயற்கையில் இருந்து கிடைத்த மனித உடல் மீண்டும் இயற்கைக்கே கொடுக்கப்படு கிறது என்ற புத்த மத கலாச்சாரம் நடைமுறைப்படுத்தப் படுகிறது. சொந்தக்காரர்கள் சென்ற பிறகு மயானத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்களே உடலை பறவைகள் உட்கொண்டன என்பதை உறுதி செய்கின்றனர். இவர்களே புகை போடுபவர்கள். கழுகுகள் சுலபமாக உண்ணும் வகையில் உடலை வெட்டித் துண்டாக்கி பல சிறிய பகுதிகளாக்கி பறவைகளுக்கு கொடுக்கின்றனர். ஒருசில நாட்களுக்குள் இறந்தவரின் உடலில் எலும்புகள் மட்டுமே மிஞ்சும். இவை சேகரிக்கப்பட்டு பொடியாக்கப்படும். பிறகு திபெத்திய சாம்பா என்ற உணவுடன் இது கலக்கப்பட்டு பறவைகளுக்கு உணவாக கொடுக்கப்படும். இறந்த உடலை கழுகுகள் உண்பதும், உடலை வெட்டித் துண்டாக்கி அவை உண்ண வசதி செய்து கொடுப்பதும் விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் திபெத் கலாச்சாரத்தின்படி இது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வே. இப்பகுதியின் புவியமைப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.