states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலகின் மிக உயரமான சியாச்சின் பனிப் பாறையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இந்திய ராணுவத்தால் மொபைல் டவர் நிறுவப்பட்டது. சியாச்சின் பனிப்பாறையில் மொபைல் டவர் நிறுவுவது இதுவே முதன்முறை யாகும்.

பழம்பெரும் நடிகை பைரவி வைத்யா (67) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பைரவி வைத்யா, சோரி சோரி சுப்கே சுப்கே, நிமா டென்சோங்பா உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக ரசிகர்களி டையே பிரபலமானார்.  இந்தி திரைப்பட நடிகை யாக அறியப்பட்டிருந்தாலும் பல குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகரில் தேவனஹள்ளி தாலூகாவில் உள்ள பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது  மூத்த மகள் கவானா தலித் இளைஞரை காத லித்ததால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை  செய்துள்ளார் தந்தை மஞ்சுநாத். 

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற ராஜதானி ரயிலில் புதனன்று துப்பாக்கிச்சூடு நடத்திய ஹர்விந்தர் சிங் (41) என்ற பயணியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் வியாழனன்று கைது செய்தனர்.

தில்லி மதுபான கலால்வரி கொள்கை முறை கேடு வழக்கில் கைதான எம்.பி.சஞ்சய் சிங்குக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு மிசோரம்  மாநிலத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் உணவு நச்சுத்தன்மை யால் உடல்நிலை பாதிக்கப்பட்டு 16 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2028இல் அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப் படும் என ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹோஸ்பேட் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ஆலம் பாஷா(20) என்பவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அரசுக்கு எதிராகவும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் கைது செய்யப்பட்டார்.