states

அனைத்து பள்ளிகளிலும் காலைச் சிற்றுண்டி

சென்னை,ஆக.6- முதல்வரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அனைத்து தொடக்கப் பள்ளி களிலும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த திட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங் குவதற்கான ஏற்பாடுகளை செய்ய சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காலை உணவு திட்டம் மூலம் மாண வர்களின் வருகை மற்றும் செயல் திறன் அதிகரித்துள்ளதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது. தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல் படுத்தப்பட்டால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாண வர்கள் பயனடைவார்கள்.  

இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற் கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் மூத்த அதிகாரி கூறினார். “தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாங்கள் சமையல் பாத்திரங்கள் வழங்கியுள்ளோம்.  தற்போது சமையலறைகள் தயாராக உள்ளன. இந்த திட்டத்தை  நாகப்பட்டினத்தில் தொடங்குவதற் கான ஏற்பாடுகளை செய்து வருகி றோம். முதல்வர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கி றோம்”என்று அவர் மேலும் கூறினார். மதிய உணவுத் திட்டத்தை துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்கெனவே கண்காணித்து வந்த நிலையில், தற்போது ஊரக வளர்ச்சித் துறை அர சாணை வெளியிட்டுள்ள அரசாணை யில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தனி  உதவியாளர் (மதியம் உணவு) ஆகி யோர் இந்த திட்டப் பணிகளில் ஈடு படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் 100 மி.லி. காய்கறி களுடன் சாம்பார் மற்றும் 150-200  கிராம் உணவு வழங்கப்படும். வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங் களைக் கொண்டு காலை உணவு  வழங்கப்படும் எனவும், மாணவர்க ளுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை காலை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.