தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு பன்றியின் விலா எலும்பு கள், ருசியான மாமிச எலும்புகள் போன்ற வற்றுக்கு மாற்றான சுவைமிக்க உண வுப்பொருட்கள் சாப்பாட்டு மேசையை அலங்கரிக்கவுள்ளன என்று இவற்றை உருவாக்கியுள்ள ஜூசி மார்பிள்ஸ் (Juicy Marbles) என்ற நிறுவனத்தின் ஆய்வா ளர்கள் கூறுகின்றனர். முதலில் இவற்றை மக்கக்கூடிய பொருட்களாக உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின் இவை சாப்பி டும் பொருளாக மாற்றப்பட்டுள்ளன. ஆகஸ்ட் இறுதியில் இருந்து இறைச்சிக்கு மாற்றான இவை யு கே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் யு எஸ்ஸில் விநியோகிக்கப்படுகிறது. முழு உற்பத்தியை தொடங்குவதற்கு முன் இவற்றின் தரம், பெயர் மற்றும் பொட்டலமிடுதல் போன்றவற்றைப் பற்றிய வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு இவற்றின் நிலையான விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க
ஆரம்பத்தில் இவற்றின் விலை உண்மையான இறைச்சியை விட அதி கமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பணக்கார நாடுகளில் மிதமிஞ்சிய அளவில் மக்கள் சிவப்பு இறைச்சியை உண்கின்றனர். இது கால நிலை மாற்றம் மோசமாக காரணமாகிறது. இப்பொருட்கள் மூலம் இதற்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் உமிழப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் ஒட்டுமொத்த உமிழ்வில் 15% இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளால் ஏற்படுகிறது. தாவரங்களின் உமிழ்வு இதை விட மிகக் குறைவு. இறைச்சி மற்றும் பால் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது மாசுபடுதலைக் குறைக்கும். பயிர் நிலங் கள் காக்கப்படும். நீர் செலவு குறையும். ஒவ்வொரு தனிமனிதனும் பூமியில் இயற்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்க மக்களுக்கு இது சிறந்த வழி.
சோயாவில் இருந்து எலும்புகள்
இத்தகைய நன்மைகளைக் கருத்தில் கொண்டு இவற்றை வரவேற்கவேண்டும். தாவரங்கள் தந்துள்ள இப்பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ நாம் தயாராகவேண்டும் என்று ஸ்லோ வேனியாவில் இருந்து செயல்படும் ஜூசி மார்பிள்ஸ் நிறுவனத்தின் தோற்றுநர் களில் ஒருவரான விளாடிமிர் மிக்கோவிக் (Vladimir Mickovic) கூறுகிறார். எலும்பு கள் முதலில் சோயாவில் இருந்து தயா ரிக்கப்படுகின்றன. இறைச்சியைப் போலவே இந்த மாற்றுப்பொருட்களும் ஒரு புதிய உண வுக்கலாசாரத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தாவரங்களில் இருந்து உண்டாக்கப்படும் இந்த எலும்புகள் மற்றும் விலா எலும்புகள் இறைச்சி யைப் போலவே சுவையுடனும் மென்மை யாகவும் இருக்கும். இப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மாதிரி உற்பத் திக்கூடம் 2022ல் தொடங்கப்பட்டது. இந்த எலும்புகளில் மாமிசத்தில் உள்ள அதே அளவு புரதம் உள்ளது. தாவரத்தின் மூலம் உருவாக்கப் பட்ட இறைச்சியை உண்ட பிறகு இந்த எலும்புகளை வறுத்தல் அல்லது வேக வைத்தல் மூலம் மொறுமொறுப்புள்ள உணவுப்பொருட்களாக சமைத்து சாப்பிட முடியும். இதனால் எலும்புகளை கழிவாக தூக்கியெறிய வேண்டிய அவசியமில்லை. இவற்றுடன் வாசனைப்பொருட்களை சேர்த்து சுவை மிக்க பொருட்களைத் தயாரிக்கலாம்.
சொல்லப்படாத சூழல் பாதிப்புகள்
இந்த எலும்புகள் வணிகரீதியில் 2024 முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தாவரங்களில் இருந்து தயாரிக்கபடும் இறைச்சியை வீகன் பர்கர் பயோ னியர்ஸ் (Vegan burger pioneers), இறைச்சியில்லாத மற்றும் பண்ணை தாவரம் மற்றும் பீன் (Meatless farm&plant&bean) போன்ற நிறு வனங்கள் தயாரித்து வருகின்றன. உண்மையான இறைச்சி பொருட்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் பற்றி அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்வ தில்லை. இஸ்ரேலைச் சேர்ந்த அலெஃப் ஃபார்ம்ஸ் (Aleph Farms) என்ற நிறுவனம் யு கே உணவு ஒழுங்குபடுத்தும் அமைப்பி டம் அதன் தயாரிப்புகளை விற்க விண்ணப்பித்துள்ளது. ஐரோப்பாவில் முதல்முறையாக தன் சந்தையைத் தொடங்கும் இந்நிறுவனம் ஜூன் 2023ல் யு எஸ்சில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு கோழி இறைச்சிப் பொருட்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது. செக் குடியரசைச் சேர்ந்த மிவேரி (Mewery) என்ற நிறுவனம் ஆய்வகத்தில் உண்டாக்கப்பட்ட பன்றி இறைச்சியை அறிமுகப்படுத்தியது. உலகின் 83% விவசாய நிலங்கள் இறைச்சி உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வேளாண்மை யின் மூலம் உமிழப்படும் 67% பசு மைக்குடில் வாயுக்களின் உமிழ்விற்கு இது காரணமாகிறது. ஆனால் உண்மை யான இறைச்சிப்பொருட்கள் மூலம் 18%ஆற்றல் மற்றும் 37% புரதம் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. பாஸ்டனைச் சேர்ந்த ஒரு ஆலோ சனை அமைப்பு 2022ன் புள்ளிவிவ ரங்களின்படி தாவரங்களில் இருந்து இறைச்சியை உற்பத்தி செய்யும் தொழிற் துறையே காலநிலை மாற்றத்தைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த முதலீடு என்று கூறியுள்ளது. சூழல் சீர்கேடுகளைத் தடுக்க ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி மற்றும் தாவரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இறைச்சிப் பொருட்களே வருங்கால உலக மக்களின் உணவாக இருக்கும் என்று ஆய்வா ளர்கள் நம்புகின்றனர்.